> >

Friday, December 17, 2010

இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறதா?

இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறதா?
குற்றச்சாட்டுக்களும் பதில்களும் பாகம் 1
எழுதியவர். பி. ஜெய்னுல் ஆபிதீன்
நபீலா பதிப்பகம் விலை 26.00ரூபாய்

ஸ்கேனிங் பார்வை (புத்தக விமர்சனம்)

உலகம் முழுதும் ஒரு குற்றச்சாட்டு இஸ்லாத்தின் மீது இருந்தாலும் அதில் ஒரு சிலர் இஸ்லாமிய வரைவிலக்கணம் சரி தான் ஆனால் அதில் உள்ளக் கொள்கைரீதியில் முரண்பாடுகள் இருக்கின்றது அதில் ஒன்றுதான் இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கின்றது என்றும் அவர்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர் அவர்கள் சுதந்திரமாக இருக்கவில்லை என்ற வாதம். இது சரியானது தானா என்று அறியும் முன்னர் மற்றவேதங்களோ இல்லை என்றால் இன்று ஆணும் பெண்ணும் சம்மானவர்கள் என்றுச் சொல்லக்கூடிய நாடுகளோ அல்லது இதற்காக உரிமைக்குரல் எழுப்புகின்றவர் களோ என்ன செய்திருக்கிறார்கள் என்பதையும் அலச வேண்டி யிருகின்றது

இஸ்லாம் பெண்களை கண்ணியப் படுத்துகின்றது என்பதற்கு பெண்கள் (அந்நிஷா) என்ற தலைப்பில் ஒரு அத்தியாயம் திருக்குர்ஆனில் இடம் பெற்று இருக்கின்றது, ஆண்கள் என்ற தலைப்பில் ஓர் அத்தியாயமும் இடம் பெறவில்லை. இதைப் போன்று வேறு எந்த மத வேதங்களிலும் இருக்கின்றதா என்ற கேள்வி முதலில் எழுகின்றது. மேற்குலகின் அறிஞர் பெர்னாட்ஷா ஐ லைக் இஸ்லாம் பட் ஐஹேட் முஸ்லிம் என்றான் சிலர் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் பார்க்காமல் முஸ்லிம்களை மாத்திரம் பார்த்து எடைப் போடுகின்றனர் இதன் காரணமாகத்தான் இப்படி பட்ட கேள்விகள்


இன்று ஆண்களைக் காட்டிலும் பெண்களே இஸ்லாத்தை உலக அளவில் அதிகம் அதிகமாய் தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்று வருவதைப் பார்க்கின்றோம். அவரகளை அது துன்புறுத்து கின்றது என்றால் அடிமைப் படுத்துகிறது என்றால் இஸ்லாத்தை எப்படி ஏற்க முன்வருகின்றார்கள். என்று சிந்திக்க வேண்டும்.

உலகில் நடந்துவரும் இந்தக் தவறான கருத்தாக்கத்தை கலையும் முகமாக இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கின்றதா என்ற புத்தகத்தை பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் எழுதி இருக்கின்றார் அவரின் கருத்துக்கள் எப்படி இருக்கின்றது என்பதை விளக்குவதே இந்த ஸ்கேனிங் பார்வையின் நோக்கம்

இந்த புத்தகம் பதிமூன்று தலைப்புகளில் எழுதப் பட்டிருக்கின்றது, இதில் இஸ்லாம் பெண்ணின் உரிமையைப் பறிக்கிறதா? ஜீவனாம்சம், பலதாரமணம், ஹிஜாப், ஆட்சித் தலைமை, பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா? போன்ற தலைப்புக்களில் அவர் தந்திருக்கின்ற விளக்கங்கள் திருமறையிலிருந்தும் நபி மொழிகளிலிருந்தும் அடுகடுக்காண சான்றுகளை காண்கிறோம்.
பலதார மணம் பற்றிய கேள்விக்கு முதல் உலக யுத்தம் இரண்டாம் உலகயுத்தம் காரணமாக எத்தனை லட்சம் ஆண்கள் உயிரிழந்துள்ளார்கள் என்ற புள்ளிவிவரங்களும் அவர்களின் மனைவியர் விதவைகளாகிய பின்னர் அவர்களுக்கு மறுமணம் அவசியம் என்பதையும் உலக கண்ணோட்டத்தோடு அலசி இருப்பது இதுவரை யாரும் இந்த கோணத்தில் அலசாத ஒன்றாகும். இப்படி அறிவு ரீதியாகவும் ஆய்வு ரீதியாகவும் இந்த புத்தகம் பக்கத்திறகுப் பக்கம் மின்னுகிறது

இந்த புத்தகத்தைப் படித்தால் தர்க்க ரீதியாக கேள்விக்கணைத் தொடுப்பவர்களுக்கு நிச்சயமாக பதில் சொல்லமுடியும். என்பது மாத்திரமல்ல நாம் அறிந்திராத பல கேள்விக்களுக்கும் பதில் கிடைக்கின்றது என்பது உண்மை. மொத்தத்தில் இந்த புத்தகம் அறிவுக் களஞ்சியம்.

இது ஒர் இமைகள் ஸ்கேனிங் பார்வையின் விமர்சனப் பகுதி.

Tuesday, December 14, 2010

திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்

ஸ்கேனிங் பார்வை(புத்தக விமர்சனம்)

திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்

பாகம் 1 , பாகம் 2

எழுதியவர். ஏ. கே, அபதுல் ரஹ்மான்

நபீலா பதிப்பகம் விலை50.00,\\28.00

வேதங்களில் அறிவியல் சான்றுகளா? இது என்ன புதிதாக என்ற நினைப்புதான் வரும் இந்த புத்தகத்தை கையில் எடுக்கும் முன்பு வரை. இதற்கு காரணம் வேதங்கள் என்பது சாஸ்திர சம்பிரதாய மற்றும் வழிபடுகளுக்காக மட்டுமே என்ற நிலையில் தான் பார்க்கப்படுகின்றது. அதையும் தாண்டி வாழ்க்கை வழிகாட்டியாக குர்ஆன் இருக்கின்றது. அப்படி இருக்கின்ற குர்ஆனில் படித்துப் பார்த்தால் வானத்தைப் பற்றியும் மேகங்களைப் பற்றியும் விவரிக்கின்றது. பல சமயவேதங்கள் எல்லாம் இறைக்கோட்பாடுகளைப் பற்றியே அறிவுருத்த குர்ஆன் மாத்திரமே மனிதன் மனிதனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் மனிதன் கடவுளுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள். மனிதன் தனக்குத் தானே நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய கடமைகள் என்று தரம்பிரிப்பதின் நடுவே சிந்தியுங்கள், அறிந்துகொள்ளுங்கள், ஆராய்ந்துப் பாருங்கள் என்று அறிவுருத்துகின்றது.

அப்படி சிந்தித்துப் பாருங்கள் என்று சொல்கின்ற பொழுது சில இடங்களில் அது மேற்கோள் காட்டுகின்ற செய்திகள் தான் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது அது பற்றி இந்த புத்தகம் மிக அழகாக விவரிக்கின்றது அது என்ன என்பது பற்றி விமர்ச்சிப்பது தான் இந்த ஸ்கேனிங் பார்வையின் நோக்கம்,

இந்த பிரபஞ்சம் எப்படித் தோண்றியது என்பது பற்றியும் சீராகவும் நேர்த்தியோடும் அமைந்திருக்கின்ற வானத்தைப் பற்றியும், நாள் தோறும் இரவுப் பகழ் மாற்றம் பற்றியும். சுழலும் பூமி பற்றியும் முதல் பாகத்திலும் பூமியில மட்டுமே மனிதர்களால் வாழ முடியும் என்பது பற்றியும் ஏன் வானம் கூரையாக இருக்கின்றது என்பதுப் பற்றியும் பூமியைநோக்கி வரும் கதிர் வீச்சுக்கள் எப்படி தடுக்கப்படுகின்றது என்பது பற்றியும் இந்த பிரபஞ்சம் எப்படி விரிந்துக் கொண்டே செல்கின்றது என்பது பற்றியும் இன்றைய ஆய்வாளர்கள் எப்படி நமக்கு எடுத்து விவரிப்பார்களோ அது போன்றே ஆயிரத்து நானூற்றி முப்பது ஆண்டுகளுக்கு முன்பு விவரித்து இருக்கின்றது என்றால் அன்று விஞ்ஞானத்தை விட அஞ்ஞானம் கோலோச்சிய காலம் அதன் பின்னர் அறிவியலை சொன்னவர்கள் கொலை செய்யப்பட்ட காலம் என்பதை மறந்துவிடக் கூடாது.

மேலே குறிப்பிடத் தக்க தலைப்புகளில் ஆசிரியர் அவர்கள் குர்ஆனில் இருந்து வசனங்களை எடுத்து விளக்கி அது இப்பொழுது அறிவியல் ஆய்வாளர்களிடத்தில் என்ன தாக்கத்தை உருவாக்கி இருப்பதோடு அவர்கள் இது தான் இந்த குர்ஆன் சொல்வதே உண்மை என்ற கருத்து தெரிவித்திருப்பதையும் மிகத் தெளிவாக விளக்கி இருப்பது பாராட்டுக் குறியதாகும்.

இந்த புத்தகத்தை படிப்பவர்கள் இறைவன் இருக்கின்றான் என்ற முடிவுக்கு வந்தே விடுவார்கள் அந்த அளவுக்கு விவரித்துள்ள விளக்கங்களால் நிரம்பிக் கிடக்கின்றது

ஆக இந்த புத்தகம் இஸ்லாமிய இலக்கிய வரலாற்றில் மைல் கல்லாக இருக்கின்றது, ஆசிரியரின் இந்த முயறசியைப் பாராட்டியே தீர வேண்டும் அதோடு குர்ஆனில் உள்ள மேலும் அறிவியல் சான்றுகளையும் மக்கள் மன்றத்திற்கு கொண்டுவர முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்

இது ஒரு இமைகள் ஸ்கேனிங் பார்வை விமர்சனம்

Friday, December 10, 2010

சமர்ப்பனம்

அந்த இலக்கியவாதியின் வார்த்தை விளையாட்டை கேட்டு பலரும் ஆச்சரியத்தில் மெய் மறந்திருந்தார்கள் அரங்கம் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.. கைத்தட்டலால் அதிரவும் செய்தது.

வாசலில் கேட்டுக் கொண்டிருந்தார்கள் இம்ரானும் அவனின் ரும் மேட் நிக்ஸனும்.

-இன்னிக்கு தமிழ்நாட்டுல பேசப்படுகின்ற ஓரே கவிஞர் இவர்தான் என்ன தத்ரூபமான கவிதைகள் அவரோட வாரத்தையை பார்த்தியா நினைச்சே பார்க்க முடியாத சிந்தனையா இருக்கு என்றான் நிக்ஸன்.
-கவிதை என்றாலே அது பொய். கவிஞன் என்றால் அவன் பொய்யன் என்றான் இம்ரான்
-என்னடா சொல்றே
-இவர்களின் கவிதைகள் எதாவது ஒன்றில் சமூக அவலத்தை சுட்டிக்காட்டுற சிந்தனை வரிகள் எதாவது இருக்கின்றது என்று சொல்ல முடியுமா உன்னால
ஏன் இல்லை நீ பாக்கல படிக்கல என்றால் அவரின் வாரத்தைகள்ள உண்மையில்லைன்னு ஆயிடுமா என்றான் நிக்ஸன்
-ஆயிரம் சிருங்கார கவிதைகளை புனைந்துவிட்டு நடுவுல ஒரே ஒரு அர்த்தமுள்ள கவிதைகளை எழுதினா அதுக்கு என்ன அரத்தம் என்றான் இம்ரான்
-அவர குறைசொல்ற தகுதி உனக்கு இருக்குன்னு நீ நினைக்கிறியா என்றான் நிக்ஸன்
-விமர்ச்சிக்கிறதுக்கு என்ன தகுதி வேண்டும் என்று நீ எதிர் பார்க்குறே என்றான் இம்ரான்
-அதோ பார் ஒரு இளம் பெண் நமக்குப் பக்கத்துல நிக்கிறா அவளை வர்ணித்து ஒரே ஒரு கவிதையை என்கிட்டே நீ சொன்னா உனக்கு தகுதி இருக்குன்னு நான் ஒத்துக்கிறேன் என்றான் நிக்ஸன்
-எனக்கு அது எல்லாம் தெரியாது என்றான் இம்ரான்
-அப்ப எதுக்கு வீண் ஜம்பம் . விமர்சிக்கிறது ரொம்ப ரொம்ப சுலபம் நீ செய்யின்னு சொன்னா உடனே யூ டர்ன் அடிச்சு சுலபமா தப்பிச்சுக்கிறது இது நல்லவா இருக்கு என்றான் நிக்ஸன்
-அதுக்காக அவர் எழுதினது எல்லாமே உலகம் போற்றுகிற கவிதைன்னு சொல்லவரியா என்றான் இம்ரான்
-தகுதி இல்லாதவன் விமர்ச்சிக்க கூடாது என்கிறது தான் என்னோட கருத்து என்றான் நிக்ஸன்
-அப்போ ரசிக்கிறதுக்கும் கைதட்டுறதுக்கும் என்ன தகுதி வேணும் என்றான் இம்ரான்.
-கேட்கிறதும் புரிஞ்சிக்கிறதும் தான் தகுதி என்றான் நிக்ஸன்
-அப்போ புரியாதவன் என்னான்னு கேட்கவேக் கூடாதா பாமரன் புரிஞ்சுக்கிற மாதிரி கவிதை எழுதமாட்டீங்களா இல்லை எழுதறது இழுக்குன்னு நினைக்கிறீங்களா என்றான் இம்ரான்
-சரி அப்போ நீ தான் யதார்த்தமான ஒரு கவிதையை அந்த பெண்ணை பார்த்து வர்ணித்து சொல்லேன் என்றான் நிக்ஸன்
-என் மனசுல எழுறத சொல்றேன் அது கவிதையா இல்லையான்னு நீ தான் சொல்லனும் என்றான் இம்ரான்
-பார்ரா நீ கூட கவிதை சொல்லப்போறியா என சிரித்தான் நிக்ஸன்
-பாத்தியா இதுகூட ஒரு விமர்சனம்ங்கிறத நீ புரிஞ்சுக்கல அதனால தான் நான் சொல்றதுக்கு முன்பே விமர்ச்சிக்க ஆரம்பிசுட்டே என்றான் இம்ரான்
-சரிப்பா உன் கவிதை வரிகளை கேட்க நான் தயாராகிவிட்டேன் என்றான் நிக்ஸன்

”புன்னகைகள் இருப்பதினால்
பொன்நகைகளில் விருப்பமில்லையோ பெண்ணே
உன் போன்றே பெண்மணிகள் நினைத்துவிட்டால்
ஆண்களுக்கு கவலை நோய் ஏது?
தொல்லைகள் ஒரு கோடி வந்தாலும்
உன் முகம் கண்டு விலகாதோ
பெண்ணே நீ கற்ற
இரகசியத்தை உன் இனத்திற்கும் உரைப்பாயா?”

-இது தான் அந்த பெண்ணைப் பார்த்ததும் என் மனதில் உதித்த வரிகள் என்றான் இம்ரான்
பின்னால் நின்றிருந்த அந்த பெண்ணின் முகத்தில் ஒரு புன்சிறிப்பு அரும்பியதை கண்டான் நிக்ஸன்
-சாரிடா இம்ரான் உனக்குள்ள ஒரு கவிஞன் இருக்கறதை நான் நினைச்சேப் பார்க்கல என்றான் நிக்ஸன்
-அந்தப் பெண் புன்னகைச் செய்ததை நாம இரண்டுப் பேருமே பார்த்தோமே அது தான் நான் சொன்ன கவிதைக்கு கிடைச்சப் பரிசுன்னு நினைக்கிறேன் என்றான் இம்ரான்
-நிச்சயமா நான் சொல்றேன்டா உனது கவிதை யதார்த்தமா இருந்துச்சு நீ இனிமேலும் கவிதை எழுதனும் என்றான் நிக்ஸன்
-வேண்டாம்ப்பா கவிதை எழுத ஆரம்பிச்சப் பின்னாடி நானும் செருக்கோடு எழுதமாட்டேனு என்ன நிச்சயம் என்றான் இம்ரான்
-கவிஞன் கிட்ட இருக்கின்ற பண்புகள்ல இதுவும் ஒன்னு இல்லையா
-அதனால
-அது தப்பே இல்ல என்றான் நிக்ஸன்
-இதுல இருந்து தான் நான் வேறுபடுறேன் என்றான் இம்ரான்
-எப்படி?
-நான் ஒரு முஸ்லிம் என்கிறத நம்புறவன் அதனால என்னால எல்லோரையும் போல எழுதிடவும் முடியாது முரண்படவும் முடியாது
-மத்தவங்க எப்படி கவிதையில முரண்படுறாங்கன்னு சொல்றே?
-ஒரு தமிழ்பட பாடல் வரியில வருது ”கடவுள் வந்து கேட்டால் கூட காணிக்கை தரமாட்டேன்” என்கிற வரி இதுக்கு என்ன அர்த்தம் கடவுள் தேவை உள்ளவன் அவனே வந்து கேட்டாலும் நான் தரமாட்டேன் என்கிறது கடவுளின் பவரை குறைக்கிறது போல தெரியலையா
இது மாத்திரமில்ல ஒரே கவிஞரே அடுத்தடுத்தப் பாடல்ல முரண்படுறதைப் பாடல்களா கேட்டதில்லையா
-அப்படி பட்ட பாடல் வரிகள் கூட இருக்கா என்ன
”மனிதன் என்பவன் தெய்வமாகலாம்ங்கிறாங்க”
அதுக்கு அடுத்தப் பாடல்ல ”கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும்” என்று எழுதுறாங்க இந்த வரிகள் கடவுள் தன்மைக்கு எதிரானது என்கிறது தெரியலையா என்றான் இம்ரான்
-அப்போ உங்க மதத்துலேயும் தான் இப்படிபட்ட பாடலையும் பாடி இருக்காங்க என்கிறது தெரியுமா உனக்கு என்றான் நிக்ஸன்
நல்லாத் தெரியும் ”இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொலவதில்லை” என்று பாடிவிட்டு அதுக்கு அடுத்த பாடல் ”நமனை விரட்ட மருந்தொன்று விக்கிது நாகூர் தர்ஹாவிலேன்னு” பாடுறது தப்பு இது ஓர் இறை கொள்கைக்கு முரண்பாடானது என்று விமர்ச்சித்து இருக்கின்றோம் இது போல யாராவது விமர்சித்து இருக்கங்களா என்றான் இம்ரான்
-அது உண்மை தான்,யாரும் அப்படி விமர்சிக்கல தான் என்றான் நிக்ஸன்
...இரண்டு வாரம் சென்றிருக்கும் நிக்ஸன் இம்ரானுக்கு தன் செல்போனின் பேசினான்
இம்ரான் எங்கேடா இருக்கே
இது லஞ்ச் டைம்னு உனக்குத் தெரியாதா கேண்டீன்ல தான் இருக்கேன் என்னடா என்ன விசயம்
முதல்ல போயி ரேகான்னு ஒரு வார இதழ் விக்கும் அத வாங்கிப் பாரு என்றான் நிக்ஸன்
அதுல என்ன இருக்கு என்றான் இம்ரான்
வாங்கிப்பாரு தெரியும் என்று சொல்லிவிட்டு போனை கட் செய்து விட்டான்
அவசரம் அவசரமாக ஆபீஸிலிருந்து வெளியே வந்து அருகில் இருந்த கடையில் தொங்கிக் கொண்டிருந்த ரேகா என்ற வார இதழை வாங்கிப் புரட்டி பார்த்தான் இம்ரான் அதில் முதல் பரிசுப் பெற்ற கவிதையாக அன்று அந்தப் பெண்ணை வர்ணித்து சொல்லி இருந்தான் அல்லவா அந்த கவிதை தான் பிரசுரிக்கப் பட்டிருந்தது மட்டுமல்ல என்னை வர்ணித்து பாடிய அந்த முகம் தெரியாத அந்த கவிஞனுக்கு சமர்ப்பிக்கன்றேன் என்று அடிகோடிடப்பட்டிருந்து.

Saturday, December 4, 2010

மாமனிதர் நபிகள் நாயகம்

ஸ்கேனிங் பார்வை (புத்தக விமர்சனம்)

மாமனிதர் நபிகள் நாயகம்

எழுதியவர் பி.ஜெய்னுல் ஆபிதீன்
இரண்டாம் பதிப்பு விலை..ரூபாய் 30.00

உலக வரலாறுகளில் ஒரு நபரை அதிகமாக புகழ்ந்ததும் இகழ்ந்ததும் உண்டு என்றால் அவர் இந்த மனிதராக மட்டுமே இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் எதார்த்த வாழ்க்கையில் அவரின் ஆன்மீகம், அரசியல் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் தூய்மையான செயல்கள் அனைத்தும் வெட்டவெளிச்சமாக இருக்கின்றது என்பது உண்மையாகும். அது மாத்திரமல்ல, உலகில் எந்த மனிதரும் சொல்லாத ஒரு கருத்தை மக்கள் மத்தியில் அவர் சொல்லி இருக்கின்றார். இதை வேறு எந்த மனிதரும் உலகில் இதற்கு முன் சொல்லி இருக்கின்றார்களா என்றால் இல்லை. அவருக்கு பின்னர் யாராவது சொல்லி இருக்கின்றார்களா என்று சரித்திரக் குறிப்பேடுகளை ஆராய்ந்தால் முஹம்மது அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. அவர் அப்படி என்ன தான் சொன்னார்? உங்களின் வாழ்க்கை இந்த உலகத்திலும் இறப்பிற்கு பின்னர் முஸ்லிம்கள் நம்பும் மறுமை வாழ்க்கையிலும் வெற்றிப் பெற வேண்டும் என்றால் அல்லாஹுவின் வேதமான குர்ஆனையும் என் வழிமுறையையும் பார்த்துப் பின்பற்றுங்கள் என்றார்கள். இது போன்று தன் வாழ்க்கையை முன்னிருத்தி யாராலும் கூறிட முடியுமா என்றால் முடியாது என்பது தான் நம் பதிலாக இருக்கும். அவரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாக இருப்பதின் காரணமாகத்தான் அவரின் மேல் குற்றம் சுமத்த நினைப்பவர்கள் எதுவும் சொல்ல முடியாமல் தாங்கள் சார்ந்திருக்கின்ற மதங்களின் அவதாரபுருஷர்கள் என்றுச் சொல்லப்படுகின்ற யாருக்கும் இப்படி ஒரு தூய்மையான வரலாறு இல்லையே என்ற ஆதங்கம் துயரமாகி, அதுவே கோபாவேசமாக மாறி இருப்பதை அறியமுடிகின்றது. அதன் விளைவாகவே இத்தனை தவறான விமர்சனங்கள் உலகம் முழுவதிலிருந்தும் ஏவுகணைகளைப் போல விரைந்து வந்தாலும், அந்த மாமனிதரின் தூய வாழ்க்கையே அதை எதிர்த்து தடுக்கும் ஸ்கட் போல இருப்பதைப் பார்க்கின்றோம்.
நபிலா பதிப்பகம் இந்த புத்தகத்தை 2004 ஆம் ஆண்டு வரை இருமுறை வெளியிட்டுள்ளது. அது மட்டுமல்ல சவுதி அரேபியாவில் இயங்கும் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம் (தாஃவா செண்டர்) இந்த புத்தகத்தை திருத்தமின்றி வெளியிட்டிருப்பது சிறப்புக்குரியதாகும்.
அந்த மாமனிதரின் வரலாற்றை பல கோணங்களில் பலரும் தங்களின் ஆக்கங்களாக வெளியிட்டிருந்தாலும், இந்த புத்தகம் எல்லாவற்றில் இருந்தும் வேறுபடுகின்றது என்பது உண்மையாகும். இது எப்படி வேறுபடுகின்றது என்பதை இனி ஆராய்ந்து விமர்சிப்பதே இந்த ஸ்கேனிங் பார்வையின் நோக்கமாகும்.
பொதுவாக ஒரு வரலாற்று நாயகரைப் பற்றி எழுதுகின்ற யாரும் அவரின் வாழ்க்கையில் நடந்த உயர்ந்த சம்பவங்கள் மற்றும் அற்புதங்களை எடுத்துக் கூறி அவரின் செயல்களுக்கு புனிதத்தை சேர்ப்பார்கள். ஆனால் இந்த புத்தகத்தில் உள்ள தலைப்புகளில் உண்டு சுகிக்கவில்லை, உடுத்தி மகிழவில்லை, சொத்து சேர்க்கவில்லை என்று இல்லை இல்லை என்பதாக காணுகின்ற பொழுதே, இவரையும் இன்றுள்ள அரசியல் மற்றும் ஆன்மீக தலைவர்களையும் நம் மனக்கண்ணில் நிறுத்தி, ஒப்பிடவைத்து இந்த மாமனிதரை எட்டாத கோபுரத்தின் உச்சியில் வைத்துவிடுகின்றது.
இன்றுள்ள ஆன்மீகத் தலைவர்கள் தங்களின் புகழுக்காக புனிதங்கள் என்ற பெயரில் தந்திரங்களை செய்வதையும், அவைகள் அனைத்தும் அற்புதங்களாக இந்த அறிவியல் உலகத்தில் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருவதையும் காண்கின்றோம். ஆனால் புகழுக்கே ஆசைப்படாத மனிதராக மாமனிதர் நபிகள் நாயகம் திகழ்ந்தார்கள் என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் இந்நூலில் காணப்படுவது சிறப்புக்குரிய ஒன்றாகும்.
நபிகளாரின் வாழ்க்கையில் நடந்த துயரம் மற்றும் எளிமையான சம்பவங்களை எடுத்து கூறுவது அவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்றதோ என்று நினைத்தோமென்றால், அவ்வாறில்லாமல் இந்த மாமனிதர் தன் வாழ்க்கையை எவ்வளவு தூய்மையாக வாழ்ந்து காட்டி சென்றிருக்கின்றார்கள் என்ற வியப்பு கலந்த ஆனந்த கண்ணீரை வரவழைக்க்கின்றது. அது அவரின் மதிப்பை முன்பைக்காட்டிலும் உயர்த்திவிடுவதோடு அவரைப் பின்பற்றியே ஆகவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.
முற்றிலும் வித்தியாசமாக எழுதப்பட்டுள்ள அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வரலாறு நெஞ்சில் நிறைந்ததாக இருக்கும் என்று சொன்னால் அது நூற்றுக்கு நூறு உண்மை. மொத்தத்தில் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற இந்த புத்தகம் ஒரு முக்கிய பதிவாகவும் முத்திரைப் பதிவாகவும் திகழ்கின்றது என்று மக்களை சொல்லவைக்கும்.

இது ஓர் இமைகள் ஸ்கேனிங் பார்வையின் விமர்சனப் பகுதி

சூனியமல்ல......... மதிப்பு

வாழ்க்கை என்பதோ உலகம்
உலகமோ ஒர் உருண்டை
உருண்டை என்பது சூனியம்
சூனியமா வாழ்க்கை ?

இமைகளை திறந்தவனுக்கு
காட்சிகளே சாட்சிகள்
இருளில் நுழைந்தவனுக்கு
சாட்சிகளே காட்சிகள்

ஓன்றுமில்லை என்பதல்ல
சூனியம்
ஞானமறியாதவனே சூனியம்
சுற்றுபவன் சுமையானவன்
சுமப்பவனே சுகமானவன்

மோகம் என்பது விடிவல்ல
மீளல் என்பதே விடிவு
விடிவெள்ளியின் அவதாரம்
அதன் பின்னல்லவா
விடியலுக்கு பிரகாசம்

வாழ்க்கை என்பது ஓர் உலகம்
உலகம் என்பது உருண்டை
உருண்டை எனபது மதிப்பு
மதிப்பல்லவா வாழ்க்கை.

Friday, November 26, 2010

எண்ணப் பறவைகள்

அன்று தான் அந்த பள்ளிக்கூடத்தின் ஆரம்ப தினம் ஒவ்வொரு கிளாஸிலும் புதிது புதிதாய் பல ஊர்களிலிருந்தும் அந்த பள்ளிக்கு மாணவிகள் படிக்க வந்திருந்தார்கள் அது ஒரு தனியார் பள்ளி மட்டுமல்ல அதன் கல்வித்தரமும் நன்றாக இருந்ததும் ஒரு காரணம்
வகுப்பறையில் நுழைந்தார் வகுப்பு ஆசிரியை எல்லோரையும் தங்களின் பெயர், ஊர், படித்தப்பள்ளி ஆகியவற்றை சொல்லச் சொன்னார் ஒவ்வொருவராக சொல்லிமுடித்தார்கள். அந்த பீரியடுக்கான பெல் அடிக்க கிளாஸிலிருந்து கிளம்பிச்சென்றார் ஆசிரியை.
ஹலோ ஐ ஆம் சரிதா என்று பக்கத்தில் உட்கார்ந்திருந்தவளிடம் கையை நீட்டினாள். ஹாய் என்று கைக்கொடுத்தாள் சமீரா.
பரஸ்பரம் கைக்குலுக்கிக் கொண்டார்கள், நாட்கள் சென்றன இவர்கள் இருவர் தம்மிலும் ஒரு ஆத்மார்த்த நட்பு வளரத் தொடங்கி இருந்தது. இருவரும் தங்களின் வகுப்பு முடிந்ததும் யாராவது ஒருவர் வீட்டிற்கு சென்று தங்கிக் கொள்ளும் அளவிற்கு அவர்களின் நட்பு இருந்தது, இத்தனைக்கும் இருவரும் படிப்பது என்னவோ ஆறாம் வகுப்பு தான். வீட்டில் எது செய்திருந்தாலும் அதை இருவரும் பள்ளிக்கு வந்ததும் பகிர்ந்து உண்ணும் அளவிற்கு நெருக்கமாக இருந்தார்கள் அன்றும் அதுப்போலத்தான் சரிதா தான் கொண்டு வந்திருந்த அந்த சாக்லெட்டை தன்வாயில் வைத்துக் கடித்து பாதியை சமீராவிடம் தந்தாள்
வேணாம்ப்பா இன்னிக்கு நான் நோன்பு வச்சிருக்கேன் என்றாள் சமீரா.
தான் கொடுத்ததை வாங்காததால் சரிதாவின் முகத்தில் திடீர் கோபம் அதனால் அவள் சமீராவிடம் பாத்தியா நீ எத்தனைத் தடவை இப்படி கடிச்சி கொடுத்ததை தின்னுருக்கேன் ஆனா இன்னிக்கு நான் கொடுத்ததை எச்சில் பட்டிருக்கும்னு தான நீ வாங்கி தின்னல என்று கோபமாய் கேட்டாள் சரிதா.
இல்லப்பா இன்னிக்கு நான் நோன்பு பிடிச்சிருக்கேன் அதனால தான் என்று சமீரா சொன்ன போதும் அவள் சட்டைச் செய்யாமல் வேறு இடம் மாறி உட்கார்ந்தாள் சரிதா. பள்ளி விட்டதும் இருவரும் முகம் திருப்பிக் கொண்டு வீட்டிற்குச் சென்றார்கள்.
வீட்டிற்கு வந்ததும் கோபமாக புத்தகப்பையை வைத்துவிட்டு சோபாவில் அமர்ந்தாள் சரிதா. அவளின் இச்செய்கையைப் பார்த்துவிட்டு அவளின் தாய்
ஏய் சரிதா என்னாச்சுடி உனக்கு புத்தகப்பையை ஏன் இப்படி தூக்கி விசுற
இன்னிக்கு சமீரா என்னை நோஸ்கட் பண்ணிட்டாம்மா
உங்களுக்குள்ள என்னடி சண்டை
இன்னிக்கு காலைல அவளுக்கு காட்பரீஸ் சாக்லெட்ல பாதிய கடிச்சு கொடுத்தேனா எப்போதும் வாங்கிக்குற அவ இன்னிக்கு வாங்கிக்க மாட்டேன்னு சொல்லி என்னை நோஸ்கட் பண்ணிட்டாம்மா.இனிமே அவக்கூட பேசவேமாட்டேன் என்றாள்.
அவ உன்கிட்ட வாங்காம இருந்ததுக்கு எதாகிலும் காரணம் இருக்கும்டி
நான் கேட்டேனே
அதுக்கு அவ என்ன சொன்னாடி
பாஸ்டிங்காம்
ஓ இது தானா முஸ்லிம்ஸ் ஒரு மாசத்திற்கு நோன்பு இருப்பாங்கடி அதனால அவங்க எதுவும் சாப்பிட மாட்டாங்க இதுக்குப போயா கோவிச்சுக்கிட்ட
பாஸ்டிங்னா என்னம்மா
அதுவா நாம விரதம்னு இருப்போம்ல அதுப் போல தான் இதுவும் நாளைக்கு சாரி கேட்டுட்டு ஒன்னா இருக்கனும் புரியுதா என்று தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
வீட்டில் அமர்ந்திருந்தாள் சமீரா
என்னம்மா ஏன் இப்புடி உட்கார்ந்திருக்கே உடம்பு கிடம்பு சரியில்லையாம்மா
இல்லம்மா இன்னிக்கு நான் நோன்பு வைச்சிருந்தேன் இல்லையா சரிதா இன்னிக்கு காலைல என்னை திங்க சொல்லி காட்பரீஸ் சாக்லெட்டை கொடுத்தா நான் வாங்கிக்கல அதனால என்னிடம் சண்டைப் போட்டுட்டு வேற பெஞ்சில் போயி உட்காந்துட்டா
நீ சொல்லலையா இன்னிக்கு நான் நோன்புன்னு
சொன்னேனே ஆனா அவ அதை எல்லாம் காதுல வாங்கிக்கவே இல்லம்மா.

காலைல ஸ்கூல் போனதும் அவகிட்ட சாரி கேட்டு ஹேண்ட் சேக் பண்ணிக்குங்க எல்லாம் சரியாயிடும் என்றாள் சமீராவின் தாய்.
காலையில் எதிரெதிராய் இருவரும் இருவர் வாயிலிருந்தும் சாரி என்ற வாசகம்
பாஸ்டிங்னா எதுவும் சாப்பிட மாட்டியா நீ
ஏர்லி மார்னிங் 3.30க்குப் முன்னாடி சாப்பிடுவோம் அதுக்குப் பிறகு ஈவினிங் 5.30க்கு தான் சாப்பிடுவோம்.
இடையில் தாகம் எடுத்தா என்ன செய்வே
சொட்டுத் தண்ணிக் கூட குடிக்கமாட்டேன்
நீ பொய் சொல்றே கிட்டத்தட்ட 13 ஹவர்ஸ் ஒரு ஆளால எப்படி பச்சத் தண்ணிக் கூட குடிக்காம இருக்கமுடியும் .இன்பாஸிபிள் யாருக்கும் தெரியாம நீ தண்ணிக்குடிச்சிடுவே
யாரும் பார்க்கல என்கிறது சரி ஆனா இறைவன் பார்த்துக்கிட்டு இருக்கானே என்று சமீரா சொன்ன போது சரிதாவிறகு எதுவம் சொல்லத்தெரியவில்லை.நம்பவும் முடியவில்லை. மாலை வீட்டிற்கு வந்தாள் சரிதா
அம்மா
என்னடி
உன்னால தேர்டீன் அவர்ஸ் சாப்பிடாம தண்ணிக்கூட குடிக்காம இருக்கமுடியுமா
நோ சான்ஸ்
அப்ப என்னால இருக்கமுடியும்னு சமீரா சொல்றாளே அப்பாக்கூட விரதம்னு இருப்பாங்க ஆனா இடையில தாகம் எடுத்தா தண்ணி குடிப்பாங்க அப்படீன்ன இது என்ன விரதம் என்றாள்
சில சமயம் பதில் சொல்லமுடியாத கேள்விகளை குழந்தைகள் கேட்டுவிட்டால் கோபத்தை தான் பதிலாக காட்டுவார்கள் இதைத் தான் சரிதாவின் அம்மாவும் செய்தாள்.
அதிகப்பிரசங்கித் தனமா எதுவும் பேசம சும்மா படுடி என்று வாயை அடைத்தாள்
அம்மா
என்ன
நாளைக்கு பிரைடே இல்லையா அதனால
அதனால என்ன
நான் சமீராவின் வீட்டுக்குப் போயிட்டுவர்ரேம்மா
சரி போயிட்டுவா என்று அனுமதி தந்தாள் அம்மா
வெள்ளிக்கிழமை மாலை பள்ளிவிட்டதும் சரிதாவும் சமீராவும் ஒன்றாய் சமீராவின் வீட்டிற்கு கிளம்பினார்கள்
ஹேய் சரிதா எத்தனை நாளாச்சு உன்னைப் பாரத்து இப்பத்தான் உனக்குத் தோனிச்சா இங்க வர்ரதுக்கு எப்படி இருக்கே நல்லா இருக்கியா என்று அன்போடு அரவணைத்தாள் சமீராவின் தாய்
நல்லா இருக்கேன் ஆண்ட்டி நீங்க எப்படி இருக்கீங்க என்றாள் சரிதா
அதற்குள் நோன்புத் திறப்பதற்கான நேரம் நெருங்க இப்தாருக்கு வேண்டிய வேலைகளை செய்ய ஆரம்பித்தாள் சமீராவின் தாய்
நோன்பு திறந்து முடிந்ததும் சற்று நேரம் பள்ளிக்கூட விசயங்க
ளைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தாள் அதன் பின்னர் சமீராவின் வீட்டிற்கு அடுத்தவீட்டுப் பெண்கள் ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தார்கள்
சமீரா என்னடி இவ்வளவு லேடீஸ் வர்ராங்க
நைட் பிரேயர் இங்கு நடக்கும் அதுக்குத் தான் வந்திருக்காங்க
இரவுத் தொழுகை முடிந்தும் அங்கிருந்தவர்களுக்காக ஒரு சிற்றுரை நிகழ்த்தினாள் சமீராவின் தாய்.
அங்கு நடந்தவைகள் அத்தனையையும் கூர்மையாக செவிதாழ்த்திக் கேட்டுக் கொண்டிருந்தாள் சரிதா அது அவளின் பிஞ்சு உள்ளத்தில் பசுமரத்தாணி போல பதிந்தும் போனது.
மேலும் அவர்கள் மூன்றுவருடம் அந்தப் பள்ளியில் ஒன்றாய் படித்தார்கள் சரிதாவின் தந்தைக்கு டிரான்ஸ்பர் வர சரிதாவும் இடம் மாறிப்போனாள் அதன் பிறகு இருவரின் வாழ்க்கையும் மாறிப்போய் விட்டது.
இப்படியாக சுமார் பதினைந்து வருடங்கள் கழிந்திருக்கும் அன்று திருச்சிப் பஸ் ஸடாண்டில் நின்றுக்கொண்டிருந்தாள் சமீரா அவளின் கையில் அவளின் மகன் அஸ்ஹர். தான் போக வேண்டிய கருணாநிதி நகர் பஸ்ஸிற்கு காத்துக் கொண்டிருந்தாள் சமீரா அந்த நேரம் புர்கா அணிந்து தன் கையில் ஓரு கைக் குழந்தையுமாய் இறங்கினாள் அந்தப் பெண் அவள் முகத்தை பாரத்ததும் இவளை எங்கோ எப்போதோ பார்த்திருக்கின்றோம் என்ற எண்ணம் உதிக்க அடுத்த நிமிடம் பளிச்சென்று அவளுக்கு ஞாபகம் வந்துவிட்டது அவள் சரிதா என்று. எப்படி அவள் புர்கா அணிந்திருக்கமுடியும் அவள் உண்மையில் இந்து அல்லவா ஒரு சமயம் நமது கணிப்புத் தவறோ என நினைத்தாள். நேராக அவளைக் கேட்டுவிடலாமா என்று நினைத்தாள். எப்படி கேட்க முடியும் உங்கள்பெயர் சரிதாவா என்று கேட்கத்தான் முடியுமா
இப்படி நினைத்து நிற்கையில் அவளே சமீராவின் அருகில் வந்து எக்ஸ்கியூஸ்மி கருணாநிதி நகர் போற பஸ் எப்ப வரும் என்றாள்
அதுக்குத்தான் நானும் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன் என்ற தோடு அவர்கள் இருவரும் ஓருவர் முகத்தை ஓருவர் பார்த்துக் கொண்டார்கள்.
நீங்க பாக்குறதுக்கு என்னோட கிளாஸ்மெட் ஓருத்தி சரிதான்னு பேரு அவளைப் போலவே இருக்கீங்க என்றாள் சமீரா
அப்படியா ஆச்சரியமா இல்ல இருக்கு இத்தனை வருசமாவா நினைப்புள வச்சிருக்கீங்க என்றாள் அவள்
இல்லைன்னா இப்ப உங்களைப் பார்த்ததும் அவளோட நினைப்பு வருதுன்னா அவக்கூட நான் எப்படி பழகி இருப்பேன்
ஆமாம் சமீரா உன்னைப் பார்த்து என்றதும்
என்ன சொன்னீங்க சமீராவா என் பேரு உங்களுக்கு எப்படி
ஏய் சமீரா நான் பஸஸைவிட்டு இறங்குறப்பவே உன்னை பார்த்துட்டேன் நான் புர்காவுல இருக்கிறத பார்த்துட்டு நீ குழம்பி நின்னதையும் பார்த்துட்டுத்தான் நானே வந்தேன்
என்றதும் ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் அவளை கட்டிப் பிடித்தாள்.
என்ன நீயும் கருணாநிதி நகர்ல தான் இருக்கியா
இல்ல நான் காஜா நகர்ல இருக்கேன்
சரி நாம இப்ப என் வீட்டுக்குப் போறோம் அம்மா பார்த்தாங்கன்னா சர்ப்ரைஸா இருக்கும் வா போகலாம் என்று ஓரு ஆட்டோவைப் பிடித்தாள் பதினைந்து நிமிடத்தில் வீட்டின் காலிங் பெல்லை அழுத்த கதவைத்திறந்தாள் சமீராவின் அம்மா.
அம்மா வாசலுக்கு வாங்களேன் யார் வந்திருக்கானு பாருங்க என்றாள் சமீரா அதற்குள் இருவரும் வீட்டிற்குள் நுழைந்தார்கள்
யாருஇது உங்களுக்குத் தெரியுதா என்றால் சமீரா தன் தாயைப் பார்த்து
அவள்முகத்தைப் பார்த்த அடுத்த வினாடியே அவளை இனம் கண்டு இது சரிதா போல இருக்கு ஆனா இந்த புர்கா தான் என்று நிறுத்தினாள் சமீராவின் தாய்
கரெக்டா சொல்லிட்டீங்க எனக்கும் எப்ப எப்படி நடந்ததுன்னு தெரியல
இருவரும் அவளின் பதிலுக்காக சரிதாவின் முகத்தைப் பார்த்தார்கள்
ஆண்ட்டி இப்ப நான் சரிதா இல்ல என் பேரு சஹீதா இனிமே நான் எப்படி தூய இஸ்லாத்தை ஏத்துக்கிட்டேன் எங்கிறத சொல்லிடுறேன்.
சஸ்பென்ஸ் இல்லாம சீக்கிரம் சொல்லுமா என்றாள் சமீராவின் தாய்
உங்களுக்கு நெனப்பு இருக்கா அன்னிக்கு ஒரு நாள் புனித ரமலான் மாத்தத்துல உங்க வீட்டிற்கு வந்தேன் இல்லையா
ஆமா எனக்கு நெனப்பு இருக்கு
அன்னிக்கு நீங்க தொழுத விதமும் அதுக்குப் பின்னாடி நீங்க செஞ்ச சின்ன லெக்சரும் என் மனதுல ஆழமா பதிஞ்சிடுச்சு இறைவன் என்றால் யார் என்பதும் அவனுடைய தூதர் யார் என்கிறதையும் இறைவனைஎப்படி வணங்கவேண்டும் எனகிறதை யும் நீங்க பேசினீங்க இல்லையா அன்னைக்கு என் மனதுல ஒரு தேடுதல் ஆரம்பமாயிடுச்சு அதன் பிறகு அப்பா டிரான்ஸ்பர் ஆனபிறகு சென்னைக்கு வந்திட்டோம் அப்புறம் காலேஜூக்கு பிறகு ஜாப் தேடி திருச்சிக்கு வந்தேன் அங்க தான் இக்பாலை பார்த்தேன் அவரோட பிகேவியர் எனக்குப் பிடிச்சிருந்தது நேரடியா அவர்கிட்ட என்னை திருமணம் செஞ்சிப்பீங்களா என கேட்டேன் அவர் சொன்ன ஒரே வார்த்தை நான் ஒரு முஸ்லிம் அதனால எனக்கு வரப்போற பெண் முஸ்லீமாக இருக்கனும்னு விரும்புகிறேன் என்றார்.
அப்புறம் நடந்ததை.அப்படியே சொல்றேன்
நான் ஒரு முஸ்லிம் நீங்களோ இந்து நமக்குள்ள எப்படி திருமண ஒப்பந்தம் சரியாவரும்
மதம் தான் தடை என்றால் நான் மாறிடுறேன்
இது நீங்க திடீர்னு எடுக்கிற முடிவு பக்குவமா இருக்காது. அது வாழ்க்கைக்கும் சரியா வராது
அப்போ என்னை என்ன செய்யச் சொல்றீங்க
உங்க வழி உங்களுக்கு என்வழி எனக்கு
காதல் வழி பார்த்து வர்ரதில்லையே
நீங்களே ஒரு டிராக்கை உருவாக்கிக்கிட்டு அதுக்கு நீங்களே ஒரு விளக்கமும் கொடுத்துகிறீங்கன்னு சொல்லிட்டார் ஆனா எனக்கு தூக்கம் வரல இவர் வேண்டாம் வேண்டாமுன்னு நகர்ந்து போறப்ப தான் எனக்கு அவர்மேல அதிகம் அதிகமா விருப்பம் ஏற்பட ஆரம்பிச்சது அதன் பின்னாடி நான் இஸ்லாம் சம்பந்தமா படிக்க ஆரம்பிச்சேன் இஸ்லாத்தை விரும்பி ஏத்துக்கிட்டேன் இக்பாலையும் வாழ்க்கைத்துணையா அல்லாஹ்வின் அருளால அடைஞ்சேன்.
உன் வீட்டுல பிரச்சினை ஏற்பட்டிருக்குமே
ஏற்பட்டுச்சுதான் என்னோட பிடிவாதம் கடைசியில ஜெயிச்சது
உன் குழந்தைக்கு என்ன பெயர் வச்சிருக்கே
சமீரான்னு உன் பெயர் தான் வச்சிருக்கேன்
இதைச்சொன்ன அடுத்த நிமிடம் சமீராவின் அம்மா கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க என்னவென்றுத் தெரியாமல் இருவரும் பதறினார்கள்.
நாம் செய்யிற சின்னச்சின்ன அமல்கள் கூட ஒருவரை இந்த அளவுக்கு ஈற்கிறது என்றால் இஸ்லாத்தின் ஆழ்ந்த கருத்துகளை மக்களுக்கு எத்தி வைத்தால் எந்த அளவுக்கு ஈர்க்கும் என்ற சிந்தனை ஏற்பட்டதால் வந்த ஆனந்த கண்ணீர், என்பது புரிந்ததும் நிம்மதி அடைந்தார்கள்.

Thursday, October 7, 2010

மாறியது நெஞ்சம்

அந்த இருவரும் கல்லூரி தோழிகள் ஆனாலும் அவர்களுக்குள் தினம் தினம் தர்க்கம் நடைப்பெற்றுக் கொண்டே இருக்கும். இன்றும் அவர்களுக்குள் தொடங்கியிருந்தது அந்த விவாதம் இருவரும் விடாகண்டர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு இனம் தெரியா ஆத்மார்த்தமான சினேகம் மதங்களைக் கடந்த அன்பு என்று கூட அதைச் சொல்லாம்.

-இன்னிக்குப் பேப்பரைப் பாத்தியா என்றாள் நிவிதா
-என்ன சேதிய புதுசா படிச்சே என்றாள் நாதிரா
-என்னத்த இருந்தாலும் உங்க சமுதாயம் ரொம்ப மோசம்பா
-ஆரம்பிச்சுட்டியா உன் கண்ணுல இன்னிக்கு என்ன தெரிஞ்சது
-பெண்கள் எல்லாரும் சமுதாயத்தோட கண்கள் என்று சொல்லிக்கிறீங்க ஆனா பேசறது ஒன்னு செய்யிறது ஒன்னா இல்ல இருக்கு.
-ஏய் சொல்லுறத நேரடியா சொல்லு சுத்தி வலைக்குறது எல்லாம் வேண்டாம் என்றாள் நாதிரா
-இதுக்கு மட்டும் குரைச்சல் இல்ல
-பாத்தியா குத்திக்காட்டுறத விட்டுட்டு சேதிய சொலலுப்பா முதல்ல
-இன்னிக்கு ஆல் இனடியா முழுதுக்கும் ஒரேப் போராட்டமா இருக்கு ஆனா உனக்குத் தெரியலேங்கிற . சரி நான் நேரடியாவே கேக்குறேன் பெண்கள் என்றால் அடிமைகள்ன்னு நினைச்சுட்டாங்களா உங்க சமுதாயத்துல
-புரியும் படியா சொல்லு இல்லன்னா சொல்லாதே என்றாள் நாதிரா
-நான் இன்னிக்கு விடுறதா இல்ல என்றாள் நவீதா
-என்னைத்திட்ட வர்ரேன்னு தெரியுது ஆனா எதுக்காக என்னைத் திட்டவர்ரேன்னு புரியில
-தல்லாதவயதுல ஓரு ஆளு தலாக் சொல்லி மனைவிக்கிட்டே இருந்து விவாகரத்து வாங்கி இருக்கான் அதுக்கு உங்க சமுதாய முல்லாக்கள் வாங்கியும் கொடுத்துட்டாங்க ஆனா அந்த மூதாட்டி எப்படி தன்னுடைய வாழ்க்கையை ஓட்டும் அதுக்கு ஜீவனாம்சம் தராம. அந்தம்மா கோர்ட்டுக்குப் போயிடுச்சு தீர்ப்பும் அந்தம்மாவுக்கு சாதகமா வந்திடுச்சு அதுக்குப் பிறகு உங்க ஆட்கள இந்த தீர்ப்புக்கு எதிரா கொடிபிடிச்சிருக்காங்க இது எந்த வகையில நியாயம் என்றாள் நவீதா
-ஓ இது தான் உன் கோபத்துக்குக் காரணமா
-நான் எவ்வளவு சீரீயஸா ஓரு சேதிய சொல்றேன் நீ நக்கலடிக்கிறியா என்று கோபமானாள் நவீதா
-கூல் டவுன் யா என்று அவளை இன்னும் வெறுப்பேற்றினாள் நாதிரா
-இது உனக்கு சில்லி மேட்டரா தெரியுதா இது ஒட்டு மொத்த பெண்களோட கௌரவப்பிரச்சினை மாத்திரமில்ல இதுக்கு எதிரா யார் வந்தாலும் எதிர்க்க வேண்டியது ஒவ்வொரு பெண்ணோட கடமையும் கூட என்று ஆவேசமானாள் நவீதா
-அதாவது ஒருபெண்ணை விவாகரத்து செய்யிற ஒரு ஆண் அந்த பெண்ணுக்கு நிச்சயமா ஜீவனாம்சம் கொடுத்தே தீரனுமனு நீ சொல்ல வர்ரே அது தானே.
-ஆமாம் இதில் என்ன சந்தேகம் இருக்கு
-அப்போ அவன் எது வரைக்கும் கொடுக்கனும்
-அவள் சாகுறவரைக்கும் கொடுக்கனும் என்றாள் நவீதா
-நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்கமாட்டியே
-ம் சொல்லு
-ஒருத்தி தன் கணவனே வேண்டாம்னு பிரிஞ்சுடுறான்னா அதுக்கு என்ன அர்த்தம்
அவனோட செயல்பாடோ இல்லைன்னா அவனோட கேரக்டரோ அவளுக்குப் பிடிக்காமத்தான் பிரியணும்
-அவனும் வேணாம் அவனோட நினைவும் வேண்டாமனு பிரியிறா ஒருத்தி அப்படி இருக்கிறப்போ மாசம் மாசம் அவன் கிட்ட ஒரு பிச்சைக்காரிப்போல கையேந்தி நிக்கச் சொல்றியே இதுக்குப் பேர்தான் பெண்ணுரிமையா அந்த மாதிரி செயலுக்கு பெயர் தான்உரிமையா இதைத் தான் நீ விரும்புறியா
-பின்ன பெண்களோட சுதந்திரத்தை எப்படி பெறுவது
-நான் தெரியாம கேட்கிறேன் அவன் வேண்டாம் அவனோட பணம் மட்டும் வேணும்னா அதுக்குப் பேர் ஜீவனாம்சமா இல்ல வேறு எதுவுமா என்றாள் நாதிரா
-நீ என்ன சொல்ல வர்ரே என்றாள் நவீதா
-இன்னிக்கு ஸ்டவ் வெடிச்சு பல பெண்கள் உயிர் இழந்திருக்காங்கன்னு பேப்பர்ல பாத்திருக்கிறியே இது எல்லாம் உண்மையிலேயே நடந்ததா இல்ல நடத்தப்பட்டிருக்கிறதான்னு நீ யோசிச்சுப் பார்த்திருக்கியா
-அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்
-ஆயிரம் சம்பந்தம் இருக்கு
-என்ன சொல்றே
-புடிக்காத மனைவிய குடும்பமா சேர்ந்து கொலைப் பண்ணிட்டு அது ஸ்டவ் வெடிச்சதா நம்ப வைக்கிற விவகாரம் தான் நடந்துகிட்டு இருக்கு அப்படி இல்லைன்னா இந்தியாவுல உற்பத்தி செய்யிற ஸ்டவ் எல்லாமே டூப்ளிகேட் என்று சொல்லவர்ரியா
-என்னை ஏம்பபா குழப்புறே என்றாள் நவீதா
-விவாகரத்து வாங்கிட்டு அவள் தன்னைவிட்டு வெளியேப் போனால் அவளுக்கு ஜீவனாம்சம் கொடுக்கனும்ங்கிறதுக்காகவே நடத்தப்படுற அப்பட்டமான கொலைகளாத்தான் இதை நான் பார்க்கிறேன் என்றாள் நாதிரா
-அப்போ உங்க மதம் என்னதான் சொல்லுது என்றாள் நவீதா
-முஸ்லிம்களைப் பொறுத்தவரை திருமணம்ங்கிறது ஒரு ஒப்பந்தமாதான் பேணப்படுது கணவன் மனைவிக்கு ஆடையைப் போல இருக்கனும்னு சொல்லுது என்றாள் நாதிரா
-பாத்தியா பெண்ணடிமைத்தனத்தை கணவன் மனைவியை அடிமைப் படுத்த இதைவிட வேற வார்த்தை வேனுமா என்றாள் நவீதா
-நான் முடிக்கிறதுக்கு முன்னாடி ஏம்பா முந்திக்கிறே மனைவியும் அப்படி இருக்கவேண்டும்னு தான் இஸ்லாம் சொல்லுது என்றாள்
-அப்போ ஒரு பெண்ணை திருமணம் செஞ்சிட்டு ஆசை அறுபது நாள மோகம் முப்பது நாள் என்கிற மாதிரி அவள கல்யாணம் செஞ்சிட்டு அவளை அம்போன்னு விட்டுட்டுப் போகறதுக்குப் பேர் தான் திருமண ஒப்பந்தமா என்றாள் நவீதா
-இப்பத்தான் ரூட்டுக்கே வந்திருக்கே என்றாள் நாதிரா
-என்ன ரூட் என்றாள் நவீதா
-நல்லா கேட்டுக்கோ ஒருபெண்ணை ஒருத்தன் திருமணம் செய்றான்னா அது ரிக்கார்டு செய்யிறது எங்க பஞ்சாயத்துல வழக்கமா இருக்குற ஒன்னு அது போல அவன் அவளை விவாகரத்து செய்யிறான்னு வச்சுக்கோ அவனுக்கு ஒரேத் தடவையில கொடுத்துட மாட்டாங்க மேகஸிமம் மூனு தடவை யாச்சும் அவங்களை சேரத்துவைக்கிற நடவடிக்கையை மேற் கொள்ளுவாங்க இதுவும் சரியா வரலைன்னா தான் விவாகரத்தே கொடுப்பாங்க அப்படிக் கொடுக்குறப்ப அவன் வரதட்சினையா வாங்கின எல்லாத்தையும் அந்தப் பெண் திருப்பி எடுத்துக்கிட்டு போயிடுவா அதோடு அவ வாழ்க்கை நடத்த தேவையான ஒருத் தொகையை அந்த ஸ்பாட்டிலேயே வாஙகிக் கொடுத்துட்டு இனி அவனுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு முடிச்சுடுவாங்க அதன் பிறகு அவள் விரும்பினாள் வேறு ஒரு கல்யாணம் செய்யிறதுக்கு அவளுக்கு உரிமை இருக்கு இத தடுக்க முன்னாள் கணவனஃமுயற்சித்தாலும் முடியாது என்றாள் நாதிரா
-இவ்வளவு இருக்கா இந்த விசயத்துல ஆமா இது எல்லாமும் எப்படி உனக்குத் தெரியம் என்றாள் நவிதா
-எங்க வேதத்துலேர்ந்து தான் படிச்சேன்
-என்னது வேதத்துலயிருந்தா என்று அதிரச்சியாக கேட்டாள் நவீதா
-கல்யாணத்தை ஆயிரம் காலத்து பயிர் என்றும் அது சொர்கத்துல நிச்சயிக்கப்படுதுன்னும் சொல்லுறாங்களே என்றாள் நவீதா
-இப்படி நடக்குற கல்யாணததுல தான் விவாகரத்தும் நடக்குது
-எனக்கு புரியலடி என்றாள் நவீதா
-அதனாலதான் இவ்வளவு கோபம் உன்கிட்ட என்றாள் நாதிரா
.வேதம் என்கிறது வாழ்க்கையின் வழிகாட்டி அத எல்லாரும் படித்துணரனும் அப்போதான் என்னன்னு அர்த்தம் விளங்கும்
-அப்போ பெண்கள் வேதத்தை படிக்கலாமா என்றாள் நவீதா
-பாத்தியா எனக்கும் உனக்கும் உள்ள வித்தியாசத்தை நீ உன்னோட மத வேதத்துல இருந்து ஒரு வார்த்தையைக்கூட கத்துக்கல ஆனா நான் முழுமையா எங்கட வேதத்தைப் படிச்சிருக்கேன் இப்பச் சொல்லு பெண்ணுரிமை எங்கே இருக்குன்னு என்றாள் நாதிரா
-வாய் மூடியிருந்தாள் நவீதா
-ஏகம் ப்ரஹம் அத்வம் நாஸ்தே நஹ்தே கிஞ்சண் அப்படின்னா என்னான்னு உனக்குத் தெரியுமா நவீதா என்றாள் நாதிரா
-ஏதோ மந்திரத்தைச் சொல்றமாதிரி இருக்கு என்றாள் நவீதா
-பாத்தியா இது உங்களோட வேத வரிகள் இதுக்கு அர்த்தம் கடவுள் ஒருவன் அவனுக்கு நிகரில்லைன்னு அர்த்தம் அதைத்தான் எங்க வேதம் லாயிலாஹா இல்லல்லாஹ் என்று சொல்லுது இதுபுரியாமா பலர் பலவிதமா எழுதுறாங்க பேசுறாங்க இத பாக்குற உன்னைப் போல பல பேர் இப்படி குன்டக்க மண்டக்க புரிஞ்சுக்கிட்டு கோபப்படுறாங்க என்றாள் நாதிரா
-சாரிப்பா உங்க வேத த்தை நான் பார்க்கலாமா என்றாள் நவீதா
-என்ன பாக்கலாமாவா படிக்கவே செய்யலாம் நாளைக்கு உனக்கு கொண்டுவந்துத் தருகின்றேன் என்ற போது நவீதாவின் முகத்தில்
ஒரு மலர்ச்சியின் அடையாளத்தை பார்த்தாள் அது என்னவாக இருக்கும் ?