> >

Friday, November 26, 2010

எண்ணப் பறவைகள்

அன்று தான் அந்த பள்ளிக்கூடத்தின் ஆரம்ப தினம் ஒவ்வொரு கிளாஸிலும் புதிது புதிதாய் பல ஊர்களிலிருந்தும் அந்த பள்ளிக்கு மாணவிகள் படிக்க வந்திருந்தார்கள் அது ஒரு தனியார் பள்ளி மட்டுமல்ல அதன் கல்வித்தரமும் நன்றாக இருந்ததும் ஒரு காரணம்
வகுப்பறையில் நுழைந்தார் வகுப்பு ஆசிரியை எல்லோரையும் தங்களின் பெயர், ஊர், படித்தப்பள்ளி ஆகியவற்றை சொல்லச் சொன்னார் ஒவ்வொருவராக சொல்லிமுடித்தார்கள். அந்த பீரியடுக்கான பெல் அடிக்க கிளாஸிலிருந்து கிளம்பிச்சென்றார் ஆசிரியை.
ஹலோ ஐ ஆம் சரிதா என்று பக்கத்தில் உட்கார்ந்திருந்தவளிடம் கையை நீட்டினாள். ஹாய் என்று கைக்கொடுத்தாள் சமீரா.
பரஸ்பரம் கைக்குலுக்கிக் கொண்டார்கள், நாட்கள் சென்றன இவர்கள் இருவர் தம்மிலும் ஒரு ஆத்மார்த்த நட்பு வளரத் தொடங்கி இருந்தது. இருவரும் தங்களின் வகுப்பு முடிந்ததும் யாராவது ஒருவர் வீட்டிற்கு சென்று தங்கிக் கொள்ளும் அளவிற்கு அவர்களின் நட்பு இருந்தது, இத்தனைக்கும் இருவரும் படிப்பது என்னவோ ஆறாம் வகுப்பு தான். வீட்டில் எது செய்திருந்தாலும் அதை இருவரும் பள்ளிக்கு வந்ததும் பகிர்ந்து உண்ணும் அளவிற்கு நெருக்கமாக இருந்தார்கள் அன்றும் அதுப்போலத்தான் சரிதா தான் கொண்டு வந்திருந்த அந்த சாக்லெட்டை தன்வாயில் வைத்துக் கடித்து பாதியை சமீராவிடம் தந்தாள்
வேணாம்ப்பா இன்னிக்கு நான் நோன்பு வச்சிருக்கேன் என்றாள் சமீரா.
தான் கொடுத்ததை வாங்காததால் சரிதாவின் முகத்தில் திடீர் கோபம் அதனால் அவள் சமீராவிடம் பாத்தியா நீ எத்தனைத் தடவை இப்படி கடிச்சி கொடுத்ததை தின்னுருக்கேன் ஆனா இன்னிக்கு நான் கொடுத்ததை எச்சில் பட்டிருக்கும்னு தான நீ வாங்கி தின்னல என்று கோபமாய் கேட்டாள் சரிதா.
இல்லப்பா இன்னிக்கு நான் நோன்பு பிடிச்சிருக்கேன் அதனால தான் என்று சமீரா சொன்ன போதும் அவள் சட்டைச் செய்யாமல் வேறு இடம் மாறி உட்கார்ந்தாள் சரிதா. பள்ளி விட்டதும் இருவரும் முகம் திருப்பிக் கொண்டு வீட்டிற்குச் சென்றார்கள்.
வீட்டிற்கு வந்ததும் கோபமாக புத்தகப்பையை வைத்துவிட்டு சோபாவில் அமர்ந்தாள் சரிதா. அவளின் இச்செய்கையைப் பார்த்துவிட்டு அவளின் தாய்
ஏய் சரிதா என்னாச்சுடி உனக்கு புத்தகப்பையை ஏன் இப்படி தூக்கி விசுற
இன்னிக்கு சமீரா என்னை நோஸ்கட் பண்ணிட்டாம்மா
உங்களுக்குள்ள என்னடி சண்டை
இன்னிக்கு காலைல அவளுக்கு காட்பரீஸ் சாக்லெட்ல பாதிய கடிச்சு கொடுத்தேனா எப்போதும் வாங்கிக்குற அவ இன்னிக்கு வாங்கிக்க மாட்டேன்னு சொல்லி என்னை நோஸ்கட் பண்ணிட்டாம்மா.இனிமே அவக்கூட பேசவேமாட்டேன் என்றாள்.
அவ உன்கிட்ட வாங்காம இருந்ததுக்கு எதாகிலும் காரணம் இருக்கும்டி
நான் கேட்டேனே
அதுக்கு அவ என்ன சொன்னாடி
பாஸ்டிங்காம்
ஓ இது தானா முஸ்லிம்ஸ் ஒரு மாசத்திற்கு நோன்பு இருப்பாங்கடி அதனால அவங்க எதுவும் சாப்பிட மாட்டாங்க இதுக்குப போயா கோவிச்சுக்கிட்ட
பாஸ்டிங்னா என்னம்மா
அதுவா நாம விரதம்னு இருப்போம்ல அதுப் போல தான் இதுவும் நாளைக்கு சாரி கேட்டுட்டு ஒன்னா இருக்கனும் புரியுதா என்று தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
வீட்டில் அமர்ந்திருந்தாள் சமீரா
என்னம்மா ஏன் இப்புடி உட்கார்ந்திருக்கே உடம்பு கிடம்பு சரியில்லையாம்மா
இல்லம்மா இன்னிக்கு நான் நோன்பு வைச்சிருந்தேன் இல்லையா சரிதா இன்னிக்கு காலைல என்னை திங்க சொல்லி காட்பரீஸ் சாக்லெட்டை கொடுத்தா நான் வாங்கிக்கல அதனால என்னிடம் சண்டைப் போட்டுட்டு வேற பெஞ்சில் போயி உட்காந்துட்டா
நீ சொல்லலையா இன்னிக்கு நான் நோன்புன்னு
சொன்னேனே ஆனா அவ அதை எல்லாம் காதுல வாங்கிக்கவே இல்லம்மா.

காலைல ஸ்கூல் போனதும் அவகிட்ட சாரி கேட்டு ஹேண்ட் சேக் பண்ணிக்குங்க எல்லாம் சரியாயிடும் என்றாள் சமீராவின் தாய்.
காலையில் எதிரெதிராய் இருவரும் இருவர் வாயிலிருந்தும் சாரி என்ற வாசகம்
பாஸ்டிங்னா எதுவும் சாப்பிட மாட்டியா நீ
ஏர்லி மார்னிங் 3.30க்குப் முன்னாடி சாப்பிடுவோம் அதுக்குப் பிறகு ஈவினிங் 5.30க்கு தான் சாப்பிடுவோம்.
இடையில் தாகம் எடுத்தா என்ன செய்வே
சொட்டுத் தண்ணிக் கூட குடிக்கமாட்டேன்
நீ பொய் சொல்றே கிட்டத்தட்ட 13 ஹவர்ஸ் ஒரு ஆளால எப்படி பச்சத் தண்ணிக் கூட குடிக்காம இருக்கமுடியும் .இன்பாஸிபிள் யாருக்கும் தெரியாம நீ தண்ணிக்குடிச்சிடுவே
யாரும் பார்க்கல என்கிறது சரி ஆனா இறைவன் பார்த்துக்கிட்டு இருக்கானே என்று சமீரா சொன்ன போது சரிதாவிறகு எதுவம் சொல்லத்தெரியவில்லை.நம்பவும் முடியவில்லை. மாலை வீட்டிற்கு வந்தாள் சரிதா
அம்மா
என்னடி
உன்னால தேர்டீன் அவர்ஸ் சாப்பிடாம தண்ணிக்கூட குடிக்காம இருக்கமுடியுமா
நோ சான்ஸ்
அப்ப என்னால இருக்கமுடியும்னு சமீரா சொல்றாளே அப்பாக்கூட விரதம்னு இருப்பாங்க ஆனா இடையில தாகம் எடுத்தா தண்ணி குடிப்பாங்க அப்படீன்ன இது என்ன விரதம் என்றாள்
சில சமயம் பதில் சொல்லமுடியாத கேள்விகளை குழந்தைகள் கேட்டுவிட்டால் கோபத்தை தான் பதிலாக காட்டுவார்கள் இதைத் தான் சரிதாவின் அம்மாவும் செய்தாள்.
அதிகப்பிரசங்கித் தனமா எதுவும் பேசம சும்மா படுடி என்று வாயை அடைத்தாள்
அம்மா
என்ன
நாளைக்கு பிரைடே இல்லையா அதனால
அதனால என்ன
நான் சமீராவின் வீட்டுக்குப் போயிட்டுவர்ரேம்மா
சரி போயிட்டுவா என்று அனுமதி தந்தாள் அம்மா
வெள்ளிக்கிழமை மாலை பள்ளிவிட்டதும் சரிதாவும் சமீராவும் ஒன்றாய் சமீராவின் வீட்டிற்கு கிளம்பினார்கள்
ஹேய் சரிதா எத்தனை நாளாச்சு உன்னைப் பாரத்து இப்பத்தான் உனக்குத் தோனிச்சா இங்க வர்ரதுக்கு எப்படி இருக்கே நல்லா இருக்கியா என்று அன்போடு அரவணைத்தாள் சமீராவின் தாய்
நல்லா இருக்கேன் ஆண்ட்டி நீங்க எப்படி இருக்கீங்க என்றாள் சரிதா
அதற்குள் நோன்புத் திறப்பதற்கான நேரம் நெருங்க இப்தாருக்கு வேண்டிய வேலைகளை செய்ய ஆரம்பித்தாள் சமீராவின் தாய்
நோன்பு திறந்து முடிந்ததும் சற்று நேரம் பள்ளிக்கூட விசயங்க
ளைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தாள் அதன் பின்னர் சமீராவின் வீட்டிற்கு அடுத்தவீட்டுப் பெண்கள் ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தார்கள்
சமீரா என்னடி இவ்வளவு லேடீஸ் வர்ராங்க
நைட் பிரேயர் இங்கு நடக்கும் அதுக்குத் தான் வந்திருக்காங்க
இரவுத் தொழுகை முடிந்தும் அங்கிருந்தவர்களுக்காக ஒரு சிற்றுரை நிகழ்த்தினாள் சமீராவின் தாய்.
அங்கு நடந்தவைகள் அத்தனையையும் கூர்மையாக செவிதாழ்த்திக் கேட்டுக் கொண்டிருந்தாள் சரிதா அது அவளின் பிஞ்சு உள்ளத்தில் பசுமரத்தாணி போல பதிந்தும் போனது.
மேலும் அவர்கள் மூன்றுவருடம் அந்தப் பள்ளியில் ஒன்றாய் படித்தார்கள் சரிதாவின் தந்தைக்கு டிரான்ஸ்பர் வர சரிதாவும் இடம் மாறிப்போனாள் அதன் பிறகு இருவரின் வாழ்க்கையும் மாறிப்போய் விட்டது.
இப்படியாக சுமார் பதினைந்து வருடங்கள் கழிந்திருக்கும் அன்று திருச்சிப் பஸ் ஸடாண்டில் நின்றுக்கொண்டிருந்தாள் சமீரா அவளின் கையில் அவளின் மகன் அஸ்ஹர். தான் போக வேண்டிய கருணாநிதி நகர் பஸ்ஸிற்கு காத்துக் கொண்டிருந்தாள் சமீரா அந்த நேரம் புர்கா அணிந்து தன் கையில் ஓரு கைக் குழந்தையுமாய் இறங்கினாள் அந்தப் பெண் அவள் முகத்தை பாரத்ததும் இவளை எங்கோ எப்போதோ பார்த்திருக்கின்றோம் என்ற எண்ணம் உதிக்க அடுத்த நிமிடம் பளிச்சென்று அவளுக்கு ஞாபகம் வந்துவிட்டது அவள் சரிதா என்று. எப்படி அவள் புர்கா அணிந்திருக்கமுடியும் அவள் உண்மையில் இந்து அல்லவா ஒரு சமயம் நமது கணிப்புத் தவறோ என நினைத்தாள். நேராக அவளைக் கேட்டுவிடலாமா என்று நினைத்தாள். எப்படி கேட்க முடியும் உங்கள்பெயர் சரிதாவா என்று கேட்கத்தான் முடியுமா
இப்படி நினைத்து நிற்கையில் அவளே சமீராவின் அருகில் வந்து எக்ஸ்கியூஸ்மி கருணாநிதி நகர் போற பஸ் எப்ப வரும் என்றாள்
அதுக்குத்தான் நானும் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன் என்ற தோடு அவர்கள் இருவரும் ஓருவர் முகத்தை ஓருவர் பார்த்துக் கொண்டார்கள்.
நீங்க பாக்குறதுக்கு என்னோட கிளாஸ்மெட் ஓருத்தி சரிதான்னு பேரு அவளைப் போலவே இருக்கீங்க என்றாள் சமீரா
அப்படியா ஆச்சரியமா இல்ல இருக்கு இத்தனை வருசமாவா நினைப்புள வச்சிருக்கீங்க என்றாள் அவள்
இல்லைன்னா இப்ப உங்களைப் பார்த்ததும் அவளோட நினைப்பு வருதுன்னா அவக்கூட நான் எப்படி பழகி இருப்பேன்
ஆமாம் சமீரா உன்னைப் பார்த்து என்றதும்
என்ன சொன்னீங்க சமீராவா என் பேரு உங்களுக்கு எப்படி
ஏய் சமீரா நான் பஸஸைவிட்டு இறங்குறப்பவே உன்னை பார்த்துட்டேன் நான் புர்காவுல இருக்கிறத பார்த்துட்டு நீ குழம்பி நின்னதையும் பார்த்துட்டுத்தான் நானே வந்தேன்
என்றதும் ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் அவளை கட்டிப் பிடித்தாள்.
என்ன நீயும் கருணாநிதி நகர்ல தான் இருக்கியா
இல்ல நான் காஜா நகர்ல இருக்கேன்
சரி நாம இப்ப என் வீட்டுக்குப் போறோம் அம்மா பார்த்தாங்கன்னா சர்ப்ரைஸா இருக்கும் வா போகலாம் என்று ஓரு ஆட்டோவைப் பிடித்தாள் பதினைந்து நிமிடத்தில் வீட்டின் காலிங் பெல்லை அழுத்த கதவைத்திறந்தாள் சமீராவின் அம்மா.
அம்மா வாசலுக்கு வாங்களேன் யார் வந்திருக்கானு பாருங்க என்றாள் சமீரா அதற்குள் இருவரும் வீட்டிற்குள் நுழைந்தார்கள்
யாருஇது உங்களுக்குத் தெரியுதா என்றால் சமீரா தன் தாயைப் பார்த்து
அவள்முகத்தைப் பார்த்த அடுத்த வினாடியே அவளை இனம் கண்டு இது சரிதா போல இருக்கு ஆனா இந்த புர்கா தான் என்று நிறுத்தினாள் சமீராவின் தாய்
கரெக்டா சொல்லிட்டீங்க எனக்கும் எப்ப எப்படி நடந்ததுன்னு தெரியல
இருவரும் அவளின் பதிலுக்காக சரிதாவின் முகத்தைப் பார்த்தார்கள்
ஆண்ட்டி இப்ப நான் சரிதா இல்ல என் பேரு சஹீதா இனிமே நான் எப்படி தூய இஸ்லாத்தை ஏத்துக்கிட்டேன் எங்கிறத சொல்லிடுறேன்.
சஸ்பென்ஸ் இல்லாம சீக்கிரம் சொல்லுமா என்றாள் சமீராவின் தாய்
உங்களுக்கு நெனப்பு இருக்கா அன்னிக்கு ஒரு நாள் புனித ரமலான் மாத்தத்துல உங்க வீட்டிற்கு வந்தேன் இல்லையா
ஆமா எனக்கு நெனப்பு இருக்கு
அன்னிக்கு நீங்க தொழுத விதமும் அதுக்குப் பின்னாடி நீங்க செஞ்ச சின்ன லெக்சரும் என் மனதுல ஆழமா பதிஞ்சிடுச்சு இறைவன் என்றால் யார் என்பதும் அவனுடைய தூதர் யார் என்கிறதையும் இறைவனைஎப்படி வணங்கவேண்டும் எனகிறதை யும் நீங்க பேசினீங்க இல்லையா அன்னைக்கு என் மனதுல ஒரு தேடுதல் ஆரம்பமாயிடுச்சு அதன் பிறகு அப்பா டிரான்ஸ்பர் ஆனபிறகு சென்னைக்கு வந்திட்டோம் அப்புறம் காலேஜூக்கு பிறகு ஜாப் தேடி திருச்சிக்கு வந்தேன் அங்க தான் இக்பாலை பார்த்தேன் அவரோட பிகேவியர் எனக்குப் பிடிச்சிருந்தது நேரடியா அவர்கிட்ட என்னை திருமணம் செஞ்சிப்பீங்களா என கேட்டேன் அவர் சொன்ன ஒரே வார்த்தை நான் ஒரு முஸ்லிம் அதனால எனக்கு வரப்போற பெண் முஸ்லீமாக இருக்கனும்னு விரும்புகிறேன் என்றார்.
அப்புறம் நடந்ததை.அப்படியே சொல்றேன்
நான் ஒரு முஸ்லிம் நீங்களோ இந்து நமக்குள்ள எப்படி திருமண ஒப்பந்தம் சரியாவரும்
மதம் தான் தடை என்றால் நான் மாறிடுறேன்
இது நீங்க திடீர்னு எடுக்கிற முடிவு பக்குவமா இருக்காது. அது வாழ்க்கைக்கும் சரியா வராது
அப்போ என்னை என்ன செய்யச் சொல்றீங்க
உங்க வழி உங்களுக்கு என்வழி எனக்கு
காதல் வழி பார்த்து வர்ரதில்லையே
நீங்களே ஒரு டிராக்கை உருவாக்கிக்கிட்டு அதுக்கு நீங்களே ஒரு விளக்கமும் கொடுத்துகிறீங்கன்னு சொல்லிட்டார் ஆனா எனக்கு தூக்கம் வரல இவர் வேண்டாம் வேண்டாமுன்னு நகர்ந்து போறப்ப தான் எனக்கு அவர்மேல அதிகம் அதிகமா விருப்பம் ஏற்பட ஆரம்பிச்சது அதன் பின்னாடி நான் இஸ்லாம் சம்பந்தமா படிக்க ஆரம்பிச்சேன் இஸ்லாத்தை விரும்பி ஏத்துக்கிட்டேன் இக்பாலையும் வாழ்க்கைத்துணையா அல்லாஹ்வின் அருளால அடைஞ்சேன்.
உன் வீட்டுல பிரச்சினை ஏற்பட்டிருக்குமே
ஏற்பட்டுச்சுதான் என்னோட பிடிவாதம் கடைசியில ஜெயிச்சது
உன் குழந்தைக்கு என்ன பெயர் வச்சிருக்கே
சமீரான்னு உன் பெயர் தான் வச்சிருக்கேன்
இதைச்சொன்ன அடுத்த நிமிடம் சமீராவின் அம்மா கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க என்னவென்றுத் தெரியாமல் இருவரும் பதறினார்கள்.
நாம் செய்யிற சின்னச்சின்ன அமல்கள் கூட ஒருவரை இந்த அளவுக்கு ஈற்கிறது என்றால் இஸ்லாத்தின் ஆழ்ந்த கருத்துகளை மக்களுக்கு எத்தி வைத்தால் எந்த அளவுக்கு ஈர்க்கும் என்ற சிந்தனை ஏற்பட்டதால் வந்த ஆனந்த கண்ணீர், என்பது புரிந்ததும் நிம்மதி அடைந்தார்கள்.