> >

Thursday, October 7, 2010

மாறியது நெஞ்சம்

அந்த இருவரும் கல்லூரி தோழிகள் ஆனாலும் அவர்களுக்குள் தினம் தினம் தர்க்கம் நடைப்பெற்றுக் கொண்டே இருக்கும். இன்றும் அவர்களுக்குள் தொடங்கியிருந்தது அந்த விவாதம் இருவரும் விடாகண்டர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு இனம் தெரியா ஆத்மார்த்தமான சினேகம் மதங்களைக் கடந்த அன்பு என்று கூட அதைச் சொல்லாம்.

-இன்னிக்குப் பேப்பரைப் பாத்தியா என்றாள் நிவிதா
-என்ன சேதிய புதுசா படிச்சே என்றாள் நாதிரா
-என்னத்த இருந்தாலும் உங்க சமுதாயம் ரொம்ப மோசம்பா
-ஆரம்பிச்சுட்டியா உன் கண்ணுல இன்னிக்கு என்ன தெரிஞ்சது
-பெண்கள் எல்லாரும் சமுதாயத்தோட கண்கள் என்று சொல்லிக்கிறீங்க ஆனா பேசறது ஒன்னு செய்யிறது ஒன்னா இல்ல இருக்கு.
-ஏய் சொல்லுறத நேரடியா சொல்லு சுத்தி வலைக்குறது எல்லாம் வேண்டாம் என்றாள் நாதிரா
-இதுக்கு மட்டும் குரைச்சல் இல்ல
-பாத்தியா குத்திக்காட்டுறத விட்டுட்டு சேதிய சொலலுப்பா முதல்ல
-இன்னிக்கு ஆல் இனடியா முழுதுக்கும் ஒரேப் போராட்டமா இருக்கு ஆனா உனக்குத் தெரியலேங்கிற . சரி நான் நேரடியாவே கேக்குறேன் பெண்கள் என்றால் அடிமைகள்ன்னு நினைச்சுட்டாங்களா உங்க சமுதாயத்துல
-புரியும் படியா சொல்லு இல்லன்னா சொல்லாதே என்றாள் நாதிரா
-நான் இன்னிக்கு விடுறதா இல்ல என்றாள் நவீதா
-என்னைத்திட்ட வர்ரேன்னு தெரியுது ஆனா எதுக்காக என்னைத் திட்டவர்ரேன்னு புரியில
-தல்லாதவயதுல ஓரு ஆளு தலாக் சொல்லி மனைவிக்கிட்டே இருந்து விவாகரத்து வாங்கி இருக்கான் அதுக்கு உங்க சமுதாய முல்லாக்கள் வாங்கியும் கொடுத்துட்டாங்க ஆனா அந்த மூதாட்டி எப்படி தன்னுடைய வாழ்க்கையை ஓட்டும் அதுக்கு ஜீவனாம்சம் தராம. அந்தம்மா கோர்ட்டுக்குப் போயிடுச்சு தீர்ப்பும் அந்தம்மாவுக்கு சாதகமா வந்திடுச்சு அதுக்குப் பிறகு உங்க ஆட்கள இந்த தீர்ப்புக்கு எதிரா கொடிபிடிச்சிருக்காங்க இது எந்த வகையில நியாயம் என்றாள் நவீதா
-ஓ இது தான் உன் கோபத்துக்குக் காரணமா
-நான் எவ்வளவு சீரீயஸா ஓரு சேதிய சொல்றேன் நீ நக்கலடிக்கிறியா என்று கோபமானாள் நவீதா
-கூல் டவுன் யா என்று அவளை இன்னும் வெறுப்பேற்றினாள் நாதிரா
-இது உனக்கு சில்லி மேட்டரா தெரியுதா இது ஒட்டு மொத்த பெண்களோட கௌரவப்பிரச்சினை மாத்திரமில்ல இதுக்கு எதிரா யார் வந்தாலும் எதிர்க்க வேண்டியது ஒவ்வொரு பெண்ணோட கடமையும் கூட என்று ஆவேசமானாள் நவீதா
-அதாவது ஒருபெண்ணை விவாகரத்து செய்யிற ஒரு ஆண் அந்த பெண்ணுக்கு நிச்சயமா ஜீவனாம்சம் கொடுத்தே தீரனுமனு நீ சொல்ல வர்ரே அது தானே.
-ஆமாம் இதில் என்ன சந்தேகம் இருக்கு
-அப்போ அவன் எது வரைக்கும் கொடுக்கனும்
-அவள் சாகுறவரைக்கும் கொடுக்கனும் என்றாள் நவீதா
-நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்கமாட்டியே
-ம் சொல்லு
-ஒருத்தி தன் கணவனே வேண்டாம்னு பிரிஞ்சுடுறான்னா அதுக்கு என்ன அர்த்தம்
அவனோட செயல்பாடோ இல்லைன்னா அவனோட கேரக்டரோ அவளுக்குப் பிடிக்காமத்தான் பிரியணும்
-அவனும் வேணாம் அவனோட நினைவும் வேண்டாமனு பிரியிறா ஒருத்தி அப்படி இருக்கிறப்போ மாசம் மாசம் அவன் கிட்ட ஒரு பிச்சைக்காரிப்போல கையேந்தி நிக்கச் சொல்றியே இதுக்குப் பேர்தான் பெண்ணுரிமையா அந்த மாதிரி செயலுக்கு பெயர் தான்உரிமையா இதைத் தான் நீ விரும்புறியா
-பின்ன பெண்களோட சுதந்திரத்தை எப்படி பெறுவது
-நான் தெரியாம கேட்கிறேன் அவன் வேண்டாம் அவனோட பணம் மட்டும் வேணும்னா அதுக்குப் பேர் ஜீவனாம்சமா இல்ல வேறு எதுவுமா என்றாள் நாதிரா
-நீ என்ன சொல்ல வர்ரே என்றாள் நவீதா
-இன்னிக்கு ஸ்டவ் வெடிச்சு பல பெண்கள் உயிர் இழந்திருக்காங்கன்னு பேப்பர்ல பாத்திருக்கிறியே இது எல்லாம் உண்மையிலேயே நடந்ததா இல்ல நடத்தப்பட்டிருக்கிறதான்னு நீ யோசிச்சுப் பார்த்திருக்கியா
-அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்
-ஆயிரம் சம்பந்தம் இருக்கு
-என்ன சொல்றே
-புடிக்காத மனைவிய குடும்பமா சேர்ந்து கொலைப் பண்ணிட்டு அது ஸ்டவ் வெடிச்சதா நம்ப வைக்கிற விவகாரம் தான் நடந்துகிட்டு இருக்கு அப்படி இல்லைன்னா இந்தியாவுல உற்பத்தி செய்யிற ஸ்டவ் எல்லாமே டூப்ளிகேட் என்று சொல்லவர்ரியா
-என்னை ஏம்பபா குழப்புறே என்றாள் நவீதா
-விவாகரத்து வாங்கிட்டு அவள் தன்னைவிட்டு வெளியேப் போனால் அவளுக்கு ஜீவனாம்சம் கொடுக்கனும்ங்கிறதுக்காகவே நடத்தப்படுற அப்பட்டமான கொலைகளாத்தான் இதை நான் பார்க்கிறேன் என்றாள் நாதிரா
-அப்போ உங்க மதம் என்னதான் சொல்லுது என்றாள் நவீதா
-முஸ்லிம்களைப் பொறுத்தவரை திருமணம்ங்கிறது ஒரு ஒப்பந்தமாதான் பேணப்படுது கணவன் மனைவிக்கு ஆடையைப் போல இருக்கனும்னு சொல்லுது என்றாள் நாதிரா
-பாத்தியா பெண்ணடிமைத்தனத்தை கணவன் மனைவியை அடிமைப் படுத்த இதைவிட வேற வார்த்தை வேனுமா என்றாள் நவீதா
-நான் முடிக்கிறதுக்கு முன்னாடி ஏம்பா முந்திக்கிறே மனைவியும் அப்படி இருக்கவேண்டும்னு தான் இஸ்லாம் சொல்லுது என்றாள்
-அப்போ ஒரு பெண்ணை திருமணம் செஞ்சிட்டு ஆசை அறுபது நாள மோகம் முப்பது நாள் என்கிற மாதிரி அவள கல்யாணம் செஞ்சிட்டு அவளை அம்போன்னு விட்டுட்டுப் போகறதுக்குப் பேர் தான் திருமண ஒப்பந்தமா என்றாள் நவீதா
-இப்பத்தான் ரூட்டுக்கே வந்திருக்கே என்றாள் நாதிரா
-என்ன ரூட் என்றாள் நவீதா
-நல்லா கேட்டுக்கோ ஒருபெண்ணை ஒருத்தன் திருமணம் செய்றான்னா அது ரிக்கார்டு செய்யிறது எங்க பஞ்சாயத்துல வழக்கமா இருக்குற ஒன்னு அது போல அவன் அவளை விவாகரத்து செய்யிறான்னு வச்சுக்கோ அவனுக்கு ஒரேத் தடவையில கொடுத்துட மாட்டாங்க மேகஸிமம் மூனு தடவை யாச்சும் அவங்களை சேரத்துவைக்கிற நடவடிக்கையை மேற் கொள்ளுவாங்க இதுவும் சரியா வரலைன்னா தான் விவாகரத்தே கொடுப்பாங்க அப்படிக் கொடுக்குறப்ப அவன் வரதட்சினையா வாங்கின எல்லாத்தையும் அந்தப் பெண் திருப்பி எடுத்துக்கிட்டு போயிடுவா அதோடு அவ வாழ்க்கை நடத்த தேவையான ஒருத் தொகையை அந்த ஸ்பாட்டிலேயே வாஙகிக் கொடுத்துட்டு இனி அவனுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு முடிச்சுடுவாங்க அதன் பிறகு அவள் விரும்பினாள் வேறு ஒரு கல்யாணம் செய்யிறதுக்கு அவளுக்கு உரிமை இருக்கு இத தடுக்க முன்னாள் கணவனஃமுயற்சித்தாலும் முடியாது என்றாள் நாதிரா
-இவ்வளவு இருக்கா இந்த விசயத்துல ஆமா இது எல்லாமும் எப்படி உனக்குத் தெரியம் என்றாள் நவிதா
-எங்க வேதத்துலேர்ந்து தான் படிச்சேன்
-என்னது வேதத்துலயிருந்தா என்று அதிரச்சியாக கேட்டாள் நவீதா
-கல்யாணத்தை ஆயிரம் காலத்து பயிர் என்றும் அது சொர்கத்துல நிச்சயிக்கப்படுதுன்னும் சொல்லுறாங்களே என்றாள் நவீதா
-இப்படி நடக்குற கல்யாணததுல தான் விவாகரத்தும் நடக்குது
-எனக்கு புரியலடி என்றாள் நவீதா
-அதனாலதான் இவ்வளவு கோபம் உன்கிட்ட என்றாள் நாதிரா
.வேதம் என்கிறது வாழ்க்கையின் வழிகாட்டி அத எல்லாரும் படித்துணரனும் அப்போதான் என்னன்னு அர்த்தம் விளங்கும்
-அப்போ பெண்கள் வேதத்தை படிக்கலாமா என்றாள் நவீதா
-பாத்தியா எனக்கும் உனக்கும் உள்ள வித்தியாசத்தை நீ உன்னோட மத வேதத்துல இருந்து ஒரு வார்த்தையைக்கூட கத்துக்கல ஆனா நான் முழுமையா எங்கட வேதத்தைப் படிச்சிருக்கேன் இப்பச் சொல்லு பெண்ணுரிமை எங்கே இருக்குன்னு என்றாள் நாதிரா
-வாய் மூடியிருந்தாள் நவீதா
-ஏகம் ப்ரஹம் அத்வம் நாஸ்தே நஹ்தே கிஞ்சண் அப்படின்னா என்னான்னு உனக்குத் தெரியுமா நவீதா என்றாள் நாதிரா
-ஏதோ மந்திரத்தைச் சொல்றமாதிரி இருக்கு என்றாள் நவீதா
-பாத்தியா இது உங்களோட வேத வரிகள் இதுக்கு அர்த்தம் கடவுள் ஒருவன் அவனுக்கு நிகரில்லைன்னு அர்த்தம் அதைத்தான் எங்க வேதம் லாயிலாஹா இல்லல்லாஹ் என்று சொல்லுது இதுபுரியாமா பலர் பலவிதமா எழுதுறாங்க பேசுறாங்க இத பாக்குற உன்னைப் போல பல பேர் இப்படி குன்டக்க மண்டக்க புரிஞ்சுக்கிட்டு கோபப்படுறாங்க என்றாள் நாதிரா
-சாரிப்பா உங்க வேத த்தை நான் பார்க்கலாமா என்றாள் நவீதா
-என்ன பாக்கலாமாவா படிக்கவே செய்யலாம் நாளைக்கு உனக்கு கொண்டுவந்துத் தருகின்றேன் என்ற போது நவீதாவின் முகத்தில்
ஒரு மலர்ச்சியின் அடையாளத்தை பார்த்தாள் அது என்னவாக இருக்கும் ?