> >

Friday, April 29, 2011

தீர்ப்பெனும் மணற்கயிறு

என் தேசம் விற்பனைக்கோ
என்ற கவலை
அந்நிய முதலீடும்
ஆளும் வர்க்க
அக்டோபஸ் கைகளும்
சங்கமித்த இந்நேரம்

வளர்ச்சிப் பாதைக்கு
வித்திடுகிறார்களாம்
வின்வெளியில்
அப்பொழுதானே
கணக்கைக் காற்றில்
எழுதலாம்
கனவுகளில் தூசி தட்டலாம்

பங்கு பிரிப்பதிலும்
நுங்கு தின்பதிலும்
அவர்களுக்கு நிகர்
அவர்களே.
அங்கே இவர்களுக்கு
நிறபேதமில்லை
இலக்க பேதங்களைத்
தவிர

பூக்களின் குவியல்
பறிப்பவனுக்கு
சொந்தமில்லை

இமயமலைச் சாரல்
இதமான சூழல்
வற்றா ஜீவநதிகள்
வற்றிய வாழ்க்கை
நிரம்பா வயிறும்
நித்திய சோகமுமாய்
நகரும் நாட்கள்

எங்கு நோக்கினும்
சடலம்
இதயம் கனக்கும்
அவலம்
இது தானா
என் தேசத்தின்
ஒற்றுமைப்
படலம்

உண்ண உணவில்லை
உடுத்தவோ உடையில்லை
எத்தனை நாட்கள்
தின்பது நிலாச்சோறு
தானமானது வியர்வைத்
துளிகள்
சொந்தமானது சோகச்
சுமைகள்
எத்தனை நாட்கள்
பசிக்கடலில்
பட்டினி சவாரி

கர்வத்தின்
உச்சியில்
வாழ்பவர்களே
சற்று வீழ்ச்சியின்
ஆழத்தையும்
நினைவில்
வையுங்கள்.

ஓடிய நரிகள்
வேதம் ஓதின
ஓடும் நரிகளும்
அரிதாரம் பூசுகின்றன.
நடந்ததும் நடப்பதும்
மறக்கடிக்கவா
இந்த நாடகம்

ஐந்தாண்டுகள்
திட்டமிட்டுத்
தீட்டப்படும்
திட்டங்கள்
எல்லாம்
தங்களின் பை
நிறப்பத்தானோ

எங்கும் ஊழல்
எதிலும் ஊழல்
உத்வேகம் கிளப்பும்
புதிய பெருச்சாலி
சுனாமியை மிஞ்சும
பெரும் சூராவளி.

கூட்டுக் களவாணிகளால்
கப்பல் ஏறும்
இந்தியாவின் மானம்
அரியணை
ஏறத்துடிக்கும்
அரசியல்வாதிகளால்
அவமானம்


இவர்கள்
அதிகார கமண்டலத்தை
தூக்கித்திரியும்
அரசியல் ஆண்டிகள்

வாழ்த்தவோ
இல்லை
வீழ்த்தவோ
துருப்புச் சீட்டாய்
வருகின்றத் தேர்தல்


பணநாயகம்
பந்தி விரித்தால்
பாமரனின்
பசி ஆற்றுமா

வழக்குகள்
வழக்கத்தைவிட
வேகமெடுக்கும்
கடைசியில்
வசப்பட்டு
கரைபடியும்

குரங்கு பங்கிட்ட
அப்பமாய்
தீர்ப்புகளும்
மடைமாறும்

குஜராத்
கொடுமைளுக்கே
நீதிக்கு விழிப்பில்லை
பின் யாருக்கு வேண்டும்
தீர்ப்பு எனும்
மணல் கயிறு..

Friday, April 8, 2011

அறிந்த வேளையில் மனது

நண்பா நீ தப்பா நினைக்கலன்னா நான் ஒன்னு சொல்லலாமுன்னு இருக்கேன் என்று அருகில் வந்தான் வில்சன்
-எம்மதமும் சம்மதமுன்னு சொல்லாதவரையில் நான் தப்பா எடுத்துக்கமாட்டேன் என்றான இம்ரான்
-அதுல தான எனக்கு புது டவுட் உன்னைப் பத்தி எனக்கு தெரியும் இல்லையா அதனால தான் முதல்லயே உன்கிட்ட பர்மிஷன் கேக்குறேன் என்றான் வில்சன்
-என்ன டவுட்
-இப்போ நீ வழிபடுற இஸ்லாத்தையும் நான் வணங்குகின்ற கிருஸ்தவத்தையும் கொஞ்ச நேரம் மறந்துவிட்டு மனிதன் என்ற அடிப்படையில் கொஞ்ச நேரம் பேசலாமா
-சும்மா நாம விவாதிக்குறதுக்கு ஏன் நம்மலோட மதத்தை கைவிடனும் என்றான் இம்ரான்

-எதுக்குச் சொல்றேன்னா சில நேரத்துல உன் மதத்தைப் பற்றியோ இல்லைன்னா என் மதத்தைப் பற்றியோ விமர்ச்சிக்க வேண்டிவரும் அப்போ நம்ம மனசு வருந்தக்கூடாது இல்லயா அதனாஈல தான் என்றான் வில்சன்
-சரி அப்படீன்னா இது பத்தி உன் மதத்திலையோ இல்லைன்னா உங்க பாதிரியார்களோ
விளக்கிஇருக்காங்களா என்றான் இம்ரான்
அப்படி விளக்கினதா இதுவரை எனக்குத் தெரியல அது இருக்கட் டும் உங்க வேதமோ இல்லன்னா உங்க முல்லாக்களோ இது பத்தி விளக்கி இருக்காங்களா என்றான் வில்சன்
-எங்க முல்லாக்கள் என்று சொல்றதவிட எங்க வேதம் இதபத்தி விளக்கம் இருக்கா இல்லன்னா எங்க நபி இது சம்பந்தமா சொல்லி இருக்காங்களான்னு தான் முதல்ல பார்ப்போம் என்றான் இம்ரான்
-ஏன் இப்படி ஒரு குருட்டு பகதி என்றான் வில்சன்
-இதுக்குப் பேரு குருட்டு பக்தி இல்ல இதை நான் ஒரு வழிக்காட்டல்ன்னு நான் நினைக்கிறேன். இன்னிக்கு உன் வாழ்க்கைக்கு ஒரு ரோல் மாடலை உன் வாழ்க்கைக்கு உந்து சக்தியா எடுத்திருக்கே இல்லயா சரியா சொல்லனும்னா உன் பெட்டுக்கு மேல ஒட்டி இருக்குற, இந்தப் படத்தைப் பார்த்த உடனேயே ஒரு நடிகன் தான் உன் ரோல் மாடல்னு தேரிஞ்சிக்க அதிகம் நேரம் ஆகாது
-ஆமாம் ஹீ ஈஸ் டேலண்ட் பெர்சன் அவரோட நடை உடை பாவனை பேச்சு கம்பீரம் ஸ்டைல் எல்லாம் எனக்கு பிடிச்சிருந்த து அதனால தான் அவர என் ரோல் மாடலாக நினைக்கிறேன்.
-இப்போ சொல்றியே இதுக்குப் பேறுதான் குருட்டு பகதிங்கிறது. வழிக்காட்டலுக்கும் கேரக்டருக்கும் இடையில் எத்தனைப் பெரிய வேறுபாடு இருக்குத் தெரியுமா நீ ரோல் மாடலாக நினைக்கிறதுக்கு இதுமட்டும் காரணமில்லைன்னு நான் நினைக் கிறேன்
-என்ன திருப்பி அடிக்கிறியா என்றான் வில்சன்
எதார்த்தத்தைச் சொன்னா அதுக்குப் பேரு திருப்பி அடிக்கிறது இல்ல.
-அவர பலரோடு ஒப்பிட்டுப் பார்த்தேன் பிடிச்சிருந்தது. அவ்வளவு தான் .
-பொய் சொல்லாதே அவர் ஒரு காதல் இளவரசன் அப்படீங்கிறதும் உன் மனசுல பதிஞ்சிருக்கிறதும் ஒரு காரணம்
-அதுவும் ஒரு காரணமா இருக்கலாம்
-என்ன இருக்கலாம் இது தான் உன் உள் மனசுல இருக்கிற உண்மை
சரி அதுக்கு என்ன இப்போ என்றான் வில்சன்
-உலக வாழ்க்கையில நீ முன்னேறுறதுக்கு இவர் என்ன உபதேசம் உனக்கு செஞ்சிருக்கார்
-நல்லா உழை வாழ்க்கையில் முன்னேறு உன் குடும்பத்தை கவனி அதன் பிறகு எங்களைப் பார் என்று சொல்லி இருக்கார் இவரைப் போல யாரும் சொல்லி இருக்காங்களா என்ன?
-இவர் என்னவோ பெரிய தத்துவத்தை சொன்னது போலவும் இதுக்கு முன்னாடி யாரும் சொல்லவே இல்லை என்கிறது போலவும் சொல்றியே உனக்கு வெட்கமா இல்லை.
-என்னடா இப்படி கேட்கிறே
-பின்ன என்ன இத உன் அப்பா எத்தனைத் தடவை உன் கிட்ட சொல்லி இருப்பார் அப்ப உன் மனசுல ஏறல உன்காதுலயும் விழல ஆன உன் ரோல் மாடல் சொன்னதும் உனக்கு மனசுல பதியிதுன்னா சினிமா எவ்வளவு தூரம் ஊடுருவி இருக்குன்னு தெரியிது.
இப்ப என்ன சொல்ல வர்ரே என்றான் வில்சன்
-படிக்காத பாமரன் இதைச் சொன்னான்னா அத அவனோட அறியாமைன்னு விட்டுடலாம் ஆன கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்ச நீ யே இப்படி இருந்தாக்கா மற்றவங்க எப்படி இருப்பாங்க
-நீ சொலறது புரியில என்றான் வில்சன்
அரிதாரம் கலைக்கிறதுக்கு முன்னாடியும் பின்னாடியும் இவர்களோட நடவடிக்கைகளைப் பத்தி என்னைக்காவது சிந்தித்து பார்த்திருக்கிறியா என்றான் இம்ரான்
-ஏன் அவங்களோட பர்சனல் பிரைவசியில தலையிடனும்
-பின்ன எதைப் பார்த்து அவங்கள ரோல் மாடலா எடுத்தே
அவரோட பத்திரிக்கைப் பேட்டி கட்டுரை இவைகளப் பார்த்து தான்
-கேமிரா முன்னால இயக்கப்படுற ஒரு ஆள் உனக்கு ரோல் மாடல்ன்னா உலகத்துல கோடிக்கணக்கானவங்க பின்னபற்றுற ஏசுவோ இல்லைன்னா முஹம்மது நபியோ உன் பார்வைக்கு வரல இல்லையா என்றான் இம்ரான்
-அது மதம் இது உலக வாழ்க்கை என்றான் வில்சன்
-சரி உன் ரோல் மாடல் உலகவாழ்க்கையில தான் சொன்னத செஞ்சிருக்காரா என்றான் இம்ரான்
-எதைச் சொல்லிட்டு செய்யல
கும்பகோணம் என்கிற ஊருல ஒரு பள்ளிக்கூடம் தீப்பிடிச்சு எரிஞ்சுப் போச்சு அதுல சிக்கி கிட்டத்தட்ட நூறு குழந்தைகள் கருகி இறந்து போயிடுச்சு. மனிதாபிமானம் எனகிற அடிப்படை யில் உன்னோட ரோல் மாடல் வந்தார் ஆறுதல் சொன்னார் அப்புறம் உதவிகளைச் செய்யிறதா பத்திரிக்கைகள்ல அறிவிப்பு செஞ்சார் ஆனா இந்த உதவி இதுவரைக்கும் கிடைக்கலியே இது இந்திய அரசாங்கத்துக்கு கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்யிறதுக்காக சொன்ன வாரத்தையோன்னு மக்கள் பேசிக்கிறாங்க என்கிற விபரமாவது உனக்குத் தெரியுமா என்றான் இம்ரான்
-அப்ப அவங்க யாரும் உதவியே செய்யிலேன்னு சொல்றியா
-மேடையில சொன்னத செய்யாத ஒரு கூத்தாடி உனக்கு ரோல் மாடலா உனக்குத் தெரிஞ்சா அது உன் இஸ்டம் ஆனா நீ கடவுள்னு நம்புற ஏசு சொன்னதைவிட அரிதாரம் பூசி கலாச்சாரத்தைக் கெடுக்கிற கூத்தாடி சொல்றது உனக்கு நல்லதா படுது
-கலாச்சாரம் எப்படி அவரால கெடும் நாம நடந்துக்கிற முறையில் அல்லவா அது இருக்கு
-படத்துல பிக்னி உடை உடுத்திக்கிட்டு வர்ரவளோடு கைகோர்த்துக்கிட்டு முத்தம் கொடுத்துக்கிட்டு இந்த விசயத்த அங்கீகரிக்கிற மாதிரி நடிக்கிறதும் பேட்டிக் கொடுக்கிறதும் சம்பாரிக்கிற பணத்தை வரிஏய்ப்பு செஞ்சிட்டு இந்திய தேசத்தின்
வளர்ச்சியை கெடுக்கிறதுமில்லாம தான் நடிக்கிறப்படம் வெற்றிப் பெறனும் என்கிறதுக்காக எதிரியைக்கூட கடவுள் என்கிற சுயநலவாதிகள் தான் இந்த நடிகர்கள் என்கிறத முதல்ல நீ புரிஞ் சுக்கனும் அவங்களோட சுயநலம் தெரியாம தான் அவங்கள ரோல் மாடலா ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கீங்க
-எல்லாரையும் ஒரேக் கணக்குள எடுத்துக்கிறது எந்தவித த்துல நியாயம் அவரும் பல சேவைகள் செஞ்சவர்தான் என்றான் வில்சன்
ஏன் நாம கூடத்தான் நேற்றுப் பேப்பரைப் பார்த்துட்டு அந்த ஆர்பனேஜுக்கு பணம் அனுப்பி வைக்கலையா இது கூட சமூக சேவை தான். எதிர்ப்பார்ப்போடு செய்யிற எந்த உதவியும் சுயநலன் கலந்த துன்னு நான் நீனைக்கிறேன் என்றான் இம்ரான்
-வாயைக் கொடுத்து வாங்கி கட்டிகிட்டேனா என்றான் வில்சன்
-நான் அப்படி தினைக்கில புரியாம இருந்த நீ புரிஞ்சிக்கிட்டேன்னு தான் நான் நினைக்கிறேன் என்றான் இம்ரான்
ஆமா உங்க வேதம் என்ன சொல்லுதுன்னு சொல்லவே இல்லையே
பரவாயில்லையே நினைப்பு வச்சு கேட்கிறே
என்னைக் கேனையன் என்றே முடிவுப்பண்ணிட்டியா
இல்ல இனிமேல் தான் முடிவுப் பன்னப்போறேன்
எப்படி
இதைத் தெரிஞ்சுகிட்டப் பிறகும் பழைய குருடி கதவைத் திறடின்னு போயிட்டேன்னு வச்சிக்கோ என்ன நினைக்கிறதாம் உன்னைப் பத்தி என்றான் இம்ரான்.
டூ மச் இன்சல்ட்
-பார்ப்போம் உன்னோட ரோல் மாடலின் அடுத்தப் படம் வர்ர வரைக்குமாவது நீ சத்தியத்துல இருக்கியான்னு
-என்னை வாருனதுப் போதும் நீ சேதிய சொல்லு
-எங்க வேதம் என்ன சொல்லுது என்கிறதையும் எங்க நபி என்ன சொல்லி இருக்காரு என்கிறதையும் உனக்கு இப்ப சொல்றேன் என்று ஆரம்பித்தான் இம்ரான் விவேகத்துடனும் அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகி யோரை அறிந்தவன் என்று தன் திருமறையில் குறிப்பிடுகின்றான்
இதைப் போலத்தான் தன்னுடைய வாழ்க்கையில் முஹம்மது நபி அவர்களும் வாழ்ந்து காட்டியும் சென்று இருக்கின்றார்கள், அதைப் பின்பற்றியே முஸ்லிம்கள் வாழ்றோம். நீ சொன்னியே ஏன் இந்த குருட்டு பக்தின்னு இதுக்கு பேரு குருட்டு பக்தி அல்ல இது அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் சொல்லிலும் ஆதாரப்பூர்வமான சரித்திரக் குறிப்பீடுகளைப் கண்டும் கேட்டும் அதைப் பின்பற்றி நடக்கிறவன் தான் முஸ்லிம் என்கிறத முதல்ல நீ புரிஞ்சுக்கனும் அவர் சொல்லி ஆயிரத்து நானூறு ஆண்டுகள் கழிஞ்ச பிறகும் இது உயிரோட்டம் உள்ளதாய் இருக்கிறதையும் அதைப்பின்பற்றுறவங்க இருக்கிறாங்க என்கிறதையும் நீ தெரிஞ்ச்சிருப்பேன்னு நான் நினைக்கிறைன் என்றான் இம்ரான்
அப்படீன்னா உங்களக் காட்டிலும் பழமையானது எங்க மதமான கிருஸ்தவம் அது தான் இன்று உலகில் பலகிப் பெருகி இருக்கு அப்போ உங்களை விட எங்க வேதமான பைபிளும் எங்க கடவுளாகிய கிருஸ்துவும் தான் என்னால சொல்ல முடியும் இல்லையா என்றான் வில்சன்
ஆதாரத்தை காட்டிட்டு தாராளமாகச் சொல்லிக்க
என்ன ஆதாரம் வேண்டும் உனக்கு என்றான் வில்சன்
-இப்ப நீயே சொன்னே எங்க கடவுள் ஏசு கிருஸ்து என்று . ஏசு மனிதரா இல்ல தெய்வமா நீ நம்புகிற உன்வேதமான பைபிளில் நான் தான் கடவுள் அதனால் என்னையே வணங்குங்கள் என்று சொல்லி இருக்காரா அதை எனக்கு காண்பி பார்ப்போம் என்றான் இம்ரான்
அப்போ எங்க வேதமான பைபிளை நல்லா படிச்சிருக்கேன்னு சொல்லு என்றான் வில்சன்
-ஆமாம் என்னை இம்ரானாகத்தான் உனக்குத் தெரியும் ஆனா அதுக்கு முன்னாடி நான் இஸ்மவேலா இருந்தது உனக்குத் தெரியுமா என்று இம்ரான் கேட்க சப்தம் வராமல் திகைத்து அதிர்ச்சியில் உறைந்துப் போனான் வில்சன்

Friday, February 11, 2011

புரிந்தது மகத்துவம்









பசியும் பட்டினியும்
கைக்கோரத்து
இளமையை உரிஞ்சியது
முதுமை
ஒட்டிக்கிடந்த
வயிற்றுப் படுகையில்
வெள்ளமாய் நிறைந்தது
உணவு


கண்ணில் பறந்த
வண்ணத்துப் பூச்சிகள்
காணாமல் போனது
பூரண நிலவின் வெளிச்சம்
புதிதாய் தெரிந்தது
அவனுக்கு


உணவுத் தந்தவனை
சிம்மாசனம் ஏற்றியது
மனது
வழக்கமாய்
வரும் பழக்கம்
கடவுள் நீ
என்ற வாசகம்


சகோதரா
கடவுள் நானெனில்
என்னைக் காப்பவன்
யார்?
கேள்வியின் வேள்வியால்
தகித்தது மனது


பசி பறந்துவிட்டால்
சிந்தனையின்

ஊற்றுக்கண்
திறக்குமன்றோ
மனது பறைந்தது
ஆம் கடவுள்
அவனில்லை எனில்
காப்பது யார்?


முகவரித் தெரியாமல்
முன்னுரையா?
முடிவுகள்
தெரிந்தபின்னே
முகஸ்துதியா?


சகோதரா
நீ தான் சொல்லேன்
கடவுள் யாரென


அவன்
ஆற்றலின் அதிபதி
தனித்தவன். தன்னிகற்றவன்
தூயவன்.துலாக்கோலால் நிறுப்பவன்
அதிகாரத்தின் இருப்பிடம்
ஆன்மாவை கைப்பற்றுபவன்


அப்படியானால்
மனிதன் யார்?
மீண்டும் முறைத்தது
கேள்வி
இறைவன் செதுக்கிய
சிற்பத்தில்
அவன் ஊதிய உயிர்
அவனின் அடிமைகள் நாம்

எல்லாம் நான்
எதிலும் நான்
என்கிறதே மானுடம்


திமிரின் ஆரவாரம்
அவனுக்குத் தெரியுமா
அடுத்த நாளில்
அவன் கதி?


இது இறையை
எதிர்க்கும் போர் முரசு
இது கற்பனைத்
தடாகத்தில் கானல் நீர்
எல்லாம் ஏகன் தந்தது
எதற்கும் வரம்புள்ளது
எல்லையறியா
இப்பிரபஞ்சத்தில்
ஏன்
இந்த வீண்வாதம்


ஆற்றலும் அறிவும்
பின்னிப் பிணைந்ததல்லவா
மானுடம்?
குதற்க மனதில்
குடிபுகுந்த கேள்வி
அறிவையும் உயிரையும்
அருளில் பெற்றதால்
அகந்தையில் உழல்கிறதா
மனது


எப்படிச் சொல்கிறாய்
ஆணவத்தின் அதிகார்க் குரல்
இடியென இறங்கியது

இல்லா ஒன்றால்
உருவானான் மனிதன்
இருக்கின்ற இரண்டால்
கருவானது மானுடம்
இல்லாத ஒன்றில் படைப்பது
ஆற்றல்
இருப்பதில் செய்வது
அறிவு
இது மலைக்கும்
மடுவுக்கும்
மனிதன்றியா
மகத்துவம்


பின் எதற்காக
நிறப்பிறிகை?
ஒற்றுமை மைதானத்தில்
ஒன்றுகூட்ட
இறை தந்த
நுழைவுத் தேர்வு
சமத்துவ சொர்க்கத்தின்
கனிமரங்கள்
இறையச்சக் கடலில்
சங்கமிக்கும்
உணர்வு நதிகள்


எல்லாம் சரி
சகோதரா
தடுப்பதும் தருவதும்
அவனெனில்
எப்படி வந்தது
கயவர்களின் கையில்
அதிகாரம்

சத்தியம்
சோதனையால்
புடம் போடும்
அசத்தியம்
அவசரத்தில்
அரியணை ஏறும்
உண்மை வெளிச்சம்
ஒளிரும் நேரம்
பொய் பனி உருகி ஓடும்


இது இறைவன்
அறிவித்த ரகசியம்
மர்ம முடிச்சுக்கள் அதிலில்லை
உலகை ருசிப்பவனுக்கு
மறுமையில்லை
மறுமையை நினைப்பவனுக்கு
இவ்வுலகமில்லை

ஆக மனிதன்
சாகப் பிறந்தவன்
அவதாரமில்லை என்கிறாய்
உண்மை சகோதரா
உண்மை
மனிதன் மனிதன் தான்
நிலைக்கா ஒன்று
நித்தியமாகுமா?


புரிந்தது சகோதரா
புரிந்தது
மண்ணறையைத்
தனதாக்கிக் கொள்பவன்
மலஜலம் சும்பபவன்
வணக்கத்திறகுறியவனா


இருக்காது இருக்கவும் முடியாது


மெல்லத் திறந்தன இமைகள்
இமைகள் திறந்தால்
இதயமும் திறக்குமன்றோ?