> >

Friday, February 11, 2011

புரிந்தது மகத்துவம்









பசியும் பட்டினியும்
கைக்கோரத்து
இளமையை உரிஞ்சியது
முதுமை
ஒட்டிக்கிடந்த
வயிற்றுப் படுகையில்
வெள்ளமாய் நிறைந்தது
உணவு


கண்ணில் பறந்த
வண்ணத்துப் பூச்சிகள்
காணாமல் போனது
பூரண நிலவின் வெளிச்சம்
புதிதாய் தெரிந்தது
அவனுக்கு


உணவுத் தந்தவனை
சிம்மாசனம் ஏற்றியது
மனது
வழக்கமாய்
வரும் பழக்கம்
கடவுள் நீ
என்ற வாசகம்


சகோதரா
கடவுள் நானெனில்
என்னைக் காப்பவன்
யார்?
கேள்வியின் வேள்வியால்
தகித்தது மனது


பசி பறந்துவிட்டால்
சிந்தனையின்

ஊற்றுக்கண்
திறக்குமன்றோ
மனது பறைந்தது
ஆம் கடவுள்
அவனில்லை எனில்
காப்பது யார்?


முகவரித் தெரியாமல்
முன்னுரையா?
முடிவுகள்
தெரிந்தபின்னே
முகஸ்துதியா?


சகோதரா
நீ தான் சொல்லேன்
கடவுள் யாரென


அவன்
ஆற்றலின் அதிபதி
தனித்தவன். தன்னிகற்றவன்
தூயவன்.துலாக்கோலால் நிறுப்பவன்
அதிகாரத்தின் இருப்பிடம்
ஆன்மாவை கைப்பற்றுபவன்


அப்படியானால்
மனிதன் யார்?
மீண்டும் முறைத்தது
கேள்வி
இறைவன் செதுக்கிய
சிற்பத்தில்
அவன் ஊதிய உயிர்
அவனின் அடிமைகள் நாம்

எல்லாம் நான்
எதிலும் நான்
என்கிறதே மானுடம்


திமிரின் ஆரவாரம்
அவனுக்குத் தெரியுமா
அடுத்த நாளில்
அவன் கதி?


இது இறையை
எதிர்க்கும் போர் முரசு
இது கற்பனைத்
தடாகத்தில் கானல் நீர்
எல்லாம் ஏகன் தந்தது
எதற்கும் வரம்புள்ளது
எல்லையறியா
இப்பிரபஞ்சத்தில்
ஏன்
இந்த வீண்வாதம்


ஆற்றலும் அறிவும்
பின்னிப் பிணைந்ததல்லவா
மானுடம்?
குதற்க மனதில்
குடிபுகுந்த கேள்வி
அறிவையும் உயிரையும்
அருளில் பெற்றதால்
அகந்தையில் உழல்கிறதா
மனது


எப்படிச் சொல்கிறாய்
ஆணவத்தின் அதிகார்க் குரல்
இடியென இறங்கியது

இல்லா ஒன்றால்
உருவானான் மனிதன்
இருக்கின்ற இரண்டால்
கருவானது மானுடம்
இல்லாத ஒன்றில் படைப்பது
ஆற்றல்
இருப்பதில் செய்வது
அறிவு
இது மலைக்கும்
மடுவுக்கும்
மனிதன்றியா
மகத்துவம்


பின் எதற்காக
நிறப்பிறிகை?
ஒற்றுமை மைதானத்தில்
ஒன்றுகூட்ட
இறை தந்த
நுழைவுத் தேர்வு
சமத்துவ சொர்க்கத்தின்
கனிமரங்கள்
இறையச்சக் கடலில்
சங்கமிக்கும்
உணர்வு நதிகள்


எல்லாம் சரி
சகோதரா
தடுப்பதும் தருவதும்
அவனெனில்
எப்படி வந்தது
கயவர்களின் கையில்
அதிகாரம்

சத்தியம்
சோதனையால்
புடம் போடும்
அசத்தியம்
அவசரத்தில்
அரியணை ஏறும்
உண்மை வெளிச்சம்
ஒளிரும் நேரம்
பொய் பனி உருகி ஓடும்


இது இறைவன்
அறிவித்த ரகசியம்
மர்ம முடிச்சுக்கள் அதிலில்லை
உலகை ருசிப்பவனுக்கு
மறுமையில்லை
மறுமையை நினைப்பவனுக்கு
இவ்வுலகமில்லை

ஆக மனிதன்
சாகப் பிறந்தவன்
அவதாரமில்லை என்கிறாய்
உண்மை சகோதரா
உண்மை
மனிதன் மனிதன் தான்
நிலைக்கா ஒன்று
நித்தியமாகுமா?


புரிந்தது சகோதரா
புரிந்தது
மண்ணறையைத்
தனதாக்கிக் கொள்பவன்
மலஜலம் சும்பபவன்
வணக்கத்திறகுறியவனா


இருக்காது இருக்கவும் முடியாது


மெல்லத் திறந்தன இமைகள்
இமைகள் திறந்தால்
இதயமும் திறக்குமன்றோ?