> >

Tuesday, December 14, 2010

திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்

ஸ்கேனிங் பார்வை(புத்தக விமர்சனம்)

திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்

பாகம் 1 , பாகம் 2

எழுதியவர். ஏ. கே, அபதுல் ரஹ்மான்

நபீலா பதிப்பகம் விலை50.00,\\28.00

வேதங்களில் அறிவியல் சான்றுகளா? இது என்ன புதிதாக என்ற நினைப்புதான் வரும் இந்த புத்தகத்தை கையில் எடுக்கும் முன்பு வரை. இதற்கு காரணம் வேதங்கள் என்பது சாஸ்திர சம்பிரதாய மற்றும் வழிபடுகளுக்காக மட்டுமே என்ற நிலையில் தான் பார்க்கப்படுகின்றது. அதையும் தாண்டி வாழ்க்கை வழிகாட்டியாக குர்ஆன் இருக்கின்றது. அப்படி இருக்கின்ற குர்ஆனில் படித்துப் பார்த்தால் வானத்தைப் பற்றியும் மேகங்களைப் பற்றியும் விவரிக்கின்றது. பல சமயவேதங்கள் எல்லாம் இறைக்கோட்பாடுகளைப் பற்றியே அறிவுருத்த குர்ஆன் மாத்திரமே மனிதன் மனிதனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் மனிதன் கடவுளுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள். மனிதன் தனக்குத் தானே நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய கடமைகள் என்று தரம்பிரிப்பதின் நடுவே சிந்தியுங்கள், அறிந்துகொள்ளுங்கள், ஆராய்ந்துப் பாருங்கள் என்று அறிவுருத்துகின்றது.

அப்படி சிந்தித்துப் பாருங்கள் என்று சொல்கின்ற பொழுது சில இடங்களில் அது மேற்கோள் காட்டுகின்ற செய்திகள் தான் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது அது பற்றி இந்த புத்தகம் மிக அழகாக விவரிக்கின்றது அது என்ன என்பது பற்றி விமர்ச்சிப்பது தான் இந்த ஸ்கேனிங் பார்வையின் நோக்கம்,

இந்த பிரபஞ்சம் எப்படித் தோண்றியது என்பது பற்றியும் சீராகவும் நேர்த்தியோடும் அமைந்திருக்கின்ற வானத்தைப் பற்றியும், நாள் தோறும் இரவுப் பகழ் மாற்றம் பற்றியும். சுழலும் பூமி பற்றியும் முதல் பாகத்திலும் பூமியில மட்டுமே மனிதர்களால் வாழ முடியும் என்பது பற்றியும் ஏன் வானம் கூரையாக இருக்கின்றது என்பதுப் பற்றியும் பூமியைநோக்கி வரும் கதிர் வீச்சுக்கள் எப்படி தடுக்கப்படுகின்றது என்பது பற்றியும் இந்த பிரபஞ்சம் எப்படி விரிந்துக் கொண்டே செல்கின்றது என்பது பற்றியும் இன்றைய ஆய்வாளர்கள் எப்படி நமக்கு எடுத்து விவரிப்பார்களோ அது போன்றே ஆயிரத்து நானூற்றி முப்பது ஆண்டுகளுக்கு முன்பு விவரித்து இருக்கின்றது என்றால் அன்று விஞ்ஞானத்தை விட அஞ்ஞானம் கோலோச்சிய காலம் அதன் பின்னர் அறிவியலை சொன்னவர்கள் கொலை செய்யப்பட்ட காலம் என்பதை மறந்துவிடக் கூடாது.

மேலே குறிப்பிடத் தக்க தலைப்புகளில் ஆசிரியர் அவர்கள் குர்ஆனில் இருந்து வசனங்களை எடுத்து விளக்கி அது இப்பொழுது அறிவியல் ஆய்வாளர்களிடத்தில் என்ன தாக்கத்தை உருவாக்கி இருப்பதோடு அவர்கள் இது தான் இந்த குர்ஆன் சொல்வதே உண்மை என்ற கருத்து தெரிவித்திருப்பதையும் மிகத் தெளிவாக விளக்கி இருப்பது பாராட்டுக் குறியதாகும்.

இந்த புத்தகத்தை படிப்பவர்கள் இறைவன் இருக்கின்றான் என்ற முடிவுக்கு வந்தே விடுவார்கள் அந்த அளவுக்கு விவரித்துள்ள விளக்கங்களால் நிரம்பிக் கிடக்கின்றது

ஆக இந்த புத்தகம் இஸ்லாமிய இலக்கிய வரலாற்றில் மைல் கல்லாக இருக்கின்றது, ஆசிரியரின் இந்த முயறசியைப் பாராட்டியே தீர வேண்டும் அதோடு குர்ஆனில் உள்ள மேலும் அறிவியல் சான்றுகளையும் மக்கள் மன்றத்திற்கு கொண்டுவர முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்

இது ஒரு இமைகள் ஸ்கேனிங் பார்வை விமர்சனம்

0 comments: