> >
Showing posts with label ஸ்கேனிங் பார்வை. Show all posts
Showing posts with label ஸ்கேனிங் பார்வை. Show all posts

Friday, December 17, 2010

இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறதா?

இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறதா?
குற்றச்சாட்டுக்களும் பதில்களும் பாகம் 1
எழுதியவர். பி. ஜெய்னுல் ஆபிதீன்
நபீலா பதிப்பகம் விலை 26.00ரூபாய்

ஸ்கேனிங் பார்வை (புத்தக விமர்சனம்)

உலகம் முழுதும் ஒரு குற்றச்சாட்டு இஸ்லாத்தின் மீது இருந்தாலும் அதில் ஒரு சிலர் இஸ்லாமிய வரைவிலக்கணம் சரி தான் ஆனால் அதில் உள்ளக் கொள்கைரீதியில் முரண்பாடுகள் இருக்கின்றது அதில் ஒன்றுதான் இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கின்றது என்றும் அவர்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர் அவர்கள் சுதந்திரமாக இருக்கவில்லை என்ற வாதம். இது சரியானது தானா என்று அறியும் முன்னர் மற்றவேதங்களோ இல்லை என்றால் இன்று ஆணும் பெண்ணும் சம்மானவர்கள் என்றுச் சொல்லக்கூடிய நாடுகளோ அல்லது இதற்காக உரிமைக்குரல் எழுப்புகின்றவர் களோ என்ன செய்திருக்கிறார்கள் என்பதையும் அலச வேண்டி யிருகின்றது

இஸ்லாம் பெண்களை கண்ணியப் படுத்துகின்றது என்பதற்கு பெண்கள் (அந்நிஷா) என்ற தலைப்பில் ஒரு அத்தியாயம் திருக்குர்ஆனில் இடம் பெற்று இருக்கின்றது, ஆண்கள் என்ற தலைப்பில் ஓர் அத்தியாயமும் இடம் பெறவில்லை. இதைப் போன்று வேறு எந்த மத வேதங்களிலும் இருக்கின்றதா என்ற கேள்வி முதலில் எழுகின்றது. மேற்குலகின் அறிஞர் பெர்னாட்ஷா ஐ லைக் இஸ்லாம் பட் ஐஹேட் முஸ்லிம் என்றான் சிலர் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் பார்க்காமல் முஸ்லிம்களை மாத்திரம் பார்த்து எடைப் போடுகின்றனர் இதன் காரணமாகத்தான் இப்படி பட்ட கேள்விகள்


இன்று ஆண்களைக் காட்டிலும் பெண்களே இஸ்லாத்தை உலக அளவில் அதிகம் அதிகமாய் தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்று வருவதைப் பார்க்கின்றோம். அவரகளை அது துன்புறுத்து கின்றது என்றால் அடிமைப் படுத்துகிறது என்றால் இஸ்லாத்தை எப்படி ஏற்க முன்வருகின்றார்கள். என்று சிந்திக்க வேண்டும்.

உலகில் நடந்துவரும் இந்தக் தவறான கருத்தாக்கத்தை கலையும் முகமாக இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கின்றதா என்ற புத்தகத்தை பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் எழுதி இருக்கின்றார் அவரின் கருத்துக்கள் எப்படி இருக்கின்றது என்பதை விளக்குவதே இந்த ஸ்கேனிங் பார்வையின் நோக்கம்

இந்த புத்தகம் பதிமூன்று தலைப்புகளில் எழுதப் பட்டிருக்கின்றது, இதில் இஸ்லாம் பெண்ணின் உரிமையைப் பறிக்கிறதா? ஜீவனாம்சம், பலதாரமணம், ஹிஜாப், ஆட்சித் தலைமை, பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா? போன்ற தலைப்புக்களில் அவர் தந்திருக்கின்ற விளக்கங்கள் திருமறையிலிருந்தும் நபி மொழிகளிலிருந்தும் அடுகடுக்காண சான்றுகளை காண்கிறோம்.
பலதார மணம் பற்றிய கேள்விக்கு முதல் உலக யுத்தம் இரண்டாம் உலகயுத்தம் காரணமாக எத்தனை லட்சம் ஆண்கள் உயிரிழந்துள்ளார்கள் என்ற புள்ளிவிவரங்களும் அவர்களின் மனைவியர் விதவைகளாகிய பின்னர் அவர்களுக்கு மறுமணம் அவசியம் என்பதையும் உலக கண்ணோட்டத்தோடு அலசி இருப்பது இதுவரை யாரும் இந்த கோணத்தில் அலசாத ஒன்றாகும். இப்படி அறிவு ரீதியாகவும் ஆய்வு ரீதியாகவும் இந்த புத்தகம் பக்கத்திறகுப் பக்கம் மின்னுகிறது

இந்த புத்தகத்தைப் படித்தால் தர்க்க ரீதியாக கேள்விக்கணைத் தொடுப்பவர்களுக்கு நிச்சயமாக பதில் சொல்லமுடியும். என்பது மாத்திரமல்ல நாம் அறிந்திராத பல கேள்விக்களுக்கும் பதில் கிடைக்கின்றது என்பது உண்மை. மொத்தத்தில் இந்த புத்தகம் அறிவுக் களஞ்சியம்.

இது ஒர் இமைகள் ஸ்கேனிங் பார்வையின் விமர்சனப் பகுதி.

Tuesday, December 14, 2010

திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்

ஸ்கேனிங் பார்வை(புத்தக விமர்சனம்)

திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்

பாகம் 1 , பாகம் 2

எழுதியவர். ஏ. கே, அபதுல் ரஹ்மான்

நபீலா பதிப்பகம் விலை50.00,\\28.00

வேதங்களில் அறிவியல் சான்றுகளா? இது என்ன புதிதாக என்ற நினைப்புதான் வரும் இந்த புத்தகத்தை கையில் எடுக்கும் முன்பு வரை. இதற்கு காரணம் வேதங்கள் என்பது சாஸ்திர சம்பிரதாய மற்றும் வழிபடுகளுக்காக மட்டுமே என்ற நிலையில் தான் பார்க்கப்படுகின்றது. அதையும் தாண்டி வாழ்க்கை வழிகாட்டியாக குர்ஆன் இருக்கின்றது. அப்படி இருக்கின்ற குர்ஆனில் படித்துப் பார்த்தால் வானத்தைப் பற்றியும் மேகங்களைப் பற்றியும் விவரிக்கின்றது. பல சமயவேதங்கள் எல்லாம் இறைக்கோட்பாடுகளைப் பற்றியே அறிவுருத்த குர்ஆன் மாத்திரமே மனிதன் மனிதனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் மனிதன் கடவுளுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள். மனிதன் தனக்குத் தானே நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய கடமைகள் என்று தரம்பிரிப்பதின் நடுவே சிந்தியுங்கள், அறிந்துகொள்ளுங்கள், ஆராய்ந்துப் பாருங்கள் என்று அறிவுருத்துகின்றது.

அப்படி சிந்தித்துப் பாருங்கள் என்று சொல்கின்ற பொழுது சில இடங்களில் அது மேற்கோள் காட்டுகின்ற செய்திகள் தான் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது அது பற்றி இந்த புத்தகம் மிக அழகாக விவரிக்கின்றது அது என்ன என்பது பற்றி விமர்ச்சிப்பது தான் இந்த ஸ்கேனிங் பார்வையின் நோக்கம்,

இந்த பிரபஞ்சம் எப்படித் தோண்றியது என்பது பற்றியும் சீராகவும் நேர்த்தியோடும் அமைந்திருக்கின்ற வானத்தைப் பற்றியும், நாள் தோறும் இரவுப் பகழ் மாற்றம் பற்றியும். சுழலும் பூமி பற்றியும் முதல் பாகத்திலும் பூமியில மட்டுமே மனிதர்களால் வாழ முடியும் என்பது பற்றியும் ஏன் வானம் கூரையாக இருக்கின்றது என்பதுப் பற்றியும் பூமியைநோக்கி வரும் கதிர் வீச்சுக்கள் எப்படி தடுக்கப்படுகின்றது என்பது பற்றியும் இந்த பிரபஞ்சம் எப்படி விரிந்துக் கொண்டே செல்கின்றது என்பது பற்றியும் இன்றைய ஆய்வாளர்கள் எப்படி நமக்கு எடுத்து விவரிப்பார்களோ அது போன்றே ஆயிரத்து நானூற்றி முப்பது ஆண்டுகளுக்கு முன்பு விவரித்து இருக்கின்றது என்றால் அன்று விஞ்ஞானத்தை விட அஞ்ஞானம் கோலோச்சிய காலம் அதன் பின்னர் அறிவியலை சொன்னவர்கள் கொலை செய்யப்பட்ட காலம் என்பதை மறந்துவிடக் கூடாது.

மேலே குறிப்பிடத் தக்க தலைப்புகளில் ஆசிரியர் அவர்கள் குர்ஆனில் இருந்து வசனங்களை எடுத்து விளக்கி அது இப்பொழுது அறிவியல் ஆய்வாளர்களிடத்தில் என்ன தாக்கத்தை உருவாக்கி இருப்பதோடு அவர்கள் இது தான் இந்த குர்ஆன் சொல்வதே உண்மை என்ற கருத்து தெரிவித்திருப்பதையும் மிகத் தெளிவாக விளக்கி இருப்பது பாராட்டுக் குறியதாகும்.

இந்த புத்தகத்தை படிப்பவர்கள் இறைவன் இருக்கின்றான் என்ற முடிவுக்கு வந்தே விடுவார்கள் அந்த அளவுக்கு விவரித்துள்ள விளக்கங்களால் நிரம்பிக் கிடக்கின்றது

ஆக இந்த புத்தகம் இஸ்லாமிய இலக்கிய வரலாற்றில் மைல் கல்லாக இருக்கின்றது, ஆசிரியரின் இந்த முயறசியைப் பாராட்டியே தீர வேண்டும் அதோடு குர்ஆனில் உள்ள மேலும் அறிவியல் சான்றுகளையும் மக்கள் மன்றத்திற்கு கொண்டுவர முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்

இது ஒரு இமைகள் ஸ்கேனிங் பார்வை விமர்சனம்

Saturday, December 4, 2010

மாமனிதர் நபிகள் நாயகம்

ஸ்கேனிங் பார்வை (புத்தக விமர்சனம்)

மாமனிதர் நபிகள் நாயகம்

எழுதியவர் பி.ஜெய்னுல் ஆபிதீன்
இரண்டாம் பதிப்பு விலை..ரூபாய் 30.00

உலக வரலாறுகளில் ஒரு நபரை அதிகமாக புகழ்ந்ததும் இகழ்ந்ததும் உண்டு என்றால் அவர் இந்த மனிதராக மட்டுமே இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் எதார்த்த வாழ்க்கையில் அவரின் ஆன்மீகம், அரசியல் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் தூய்மையான செயல்கள் அனைத்தும் வெட்டவெளிச்சமாக இருக்கின்றது என்பது உண்மையாகும். அது மாத்திரமல்ல, உலகில் எந்த மனிதரும் சொல்லாத ஒரு கருத்தை மக்கள் மத்தியில் அவர் சொல்லி இருக்கின்றார். இதை வேறு எந்த மனிதரும் உலகில் இதற்கு முன் சொல்லி இருக்கின்றார்களா என்றால் இல்லை. அவருக்கு பின்னர் யாராவது சொல்லி இருக்கின்றார்களா என்று சரித்திரக் குறிப்பேடுகளை ஆராய்ந்தால் முஹம்மது அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. அவர் அப்படி என்ன தான் சொன்னார்? உங்களின் வாழ்க்கை இந்த உலகத்திலும் இறப்பிற்கு பின்னர் முஸ்லிம்கள் நம்பும் மறுமை வாழ்க்கையிலும் வெற்றிப் பெற வேண்டும் என்றால் அல்லாஹுவின் வேதமான குர்ஆனையும் என் வழிமுறையையும் பார்த்துப் பின்பற்றுங்கள் என்றார்கள். இது போன்று தன் வாழ்க்கையை முன்னிருத்தி யாராலும் கூறிட முடியுமா என்றால் முடியாது என்பது தான் நம் பதிலாக இருக்கும். அவரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாக இருப்பதின் காரணமாகத்தான் அவரின் மேல் குற்றம் சுமத்த நினைப்பவர்கள் எதுவும் சொல்ல முடியாமல் தாங்கள் சார்ந்திருக்கின்ற மதங்களின் அவதாரபுருஷர்கள் என்றுச் சொல்லப்படுகின்ற யாருக்கும் இப்படி ஒரு தூய்மையான வரலாறு இல்லையே என்ற ஆதங்கம் துயரமாகி, அதுவே கோபாவேசமாக மாறி இருப்பதை அறியமுடிகின்றது. அதன் விளைவாகவே இத்தனை தவறான விமர்சனங்கள் உலகம் முழுவதிலிருந்தும் ஏவுகணைகளைப் போல விரைந்து வந்தாலும், அந்த மாமனிதரின் தூய வாழ்க்கையே அதை எதிர்த்து தடுக்கும் ஸ்கட் போல இருப்பதைப் பார்க்கின்றோம்.
நபிலா பதிப்பகம் இந்த புத்தகத்தை 2004 ஆம் ஆண்டு வரை இருமுறை வெளியிட்டுள்ளது. அது மட்டுமல்ல சவுதி அரேபியாவில் இயங்கும் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம் (தாஃவா செண்டர்) இந்த புத்தகத்தை திருத்தமின்றி வெளியிட்டிருப்பது சிறப்புக்குரியதாகும்.
அந்த மாமனிதரின் வரலாற்றை பல கோணங்களில் பலரும் தங்களின் ஆக்கங்களாக வெளியிட்டிருந்தாலும், இந்த புத்தகம் எல்லாவற்றில் இருந்தும் வேறுபடுகின்றது என்பது உண்மையாகும். இது எப்படி வேறுபடுகின்றது என்பதை இனி ஆராய்ந்து விமர்சிப்பதே இந்த ஸ்கேனிங் பார்வையின் நோக்கமாகும்.
பொதுவாக ஒரு வரலாற்று நாயகரைப் பற்றி எழுதுகின்ற யாரும் அவரின் வாழ்க்கையில் நடந்த உயர்ந்த சம்பவங்கள் மற்றும் அற்புதங்களை எடுத்துக் கூறி அவரின் செயல்களுக்கு புனிதத்தை சேர்ப்பார்கள். ஆனால் இந்த புத்தகத்தில் உள்ள தலைப்புகளில் உண்டு சுகிக்கவில்லை, உடுத்தி மகிழவில்லை, சொத்து சேர்க்கவில்லை என்று இல்லை இல்லை என்பதாக காணுகின்ற பொழுதே, இவரையும் இன்றுள்ள அரசியல் மற்றும் ஆன்மீக தலைவர்களையும் நம் மனக்கண்ணில் நிறுத்தி, ஒப்பிடவைத்து இந்த மாமனிதரை எட்டாத கோபுரத்தின் உச்சியில் வைத்துவிடுகின்றது.
இன்றுள்ள ஆன்மீகத் தலைவர்கள் தங்களின் புகழுக்காக புனிதங்கள் என்ற பெயரில் தந்திரங்களை செய்வதையும், அவைகள் அனைத்தும் அற்புதங்களாக இந்த அறிவியல் உலகத்தில் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருவதையும் காண்கின்றோம். ஆனால் புகழுக்கே ஆசைப்படாத மனிதராக மாமனிதர் நபிகள் நாயகம் திகழ்ந்தார்கள் என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் இந்நூலில் காணப்படுவது சிறப்புக்குரிய ஒன்றாகும்.
நபிகளாரின் வாழ்க்கையில் நடந்த துயரம் மற்றும் எளிமையான சம்பவங்களை எடுத்து கூறுவது அவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்றதோ என்று நினைத்தோமென்றால், அவ்வாறில்லாமல் இந்த மாமனிதர் தன் வாழ்க்கையை எவ்வளவு தூய்மையாக வாழ்ந்து காட்டி சென்றிருக்கின்றார்கள் என்ற வியப்பு கலந்த ஆனந்த கண்ணீரை வரவழைக்க்கின்றது. அது அவரின் மதிப்பை முன்பைக்காட்டிலும் உயர்த்திவிடுவதோடு அவரைப் பின்பற்றியே ஆகவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.
முற்றிலும் வித்தியாசமாக எழுதப்பட்டுள்ள அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வரலாறு நெஞ்சில் நிறைந்ததாக இருக்கும் என்று சொன்னால் அது நூற்றுக்கு நூறு உண்மை. மொத்தத்தில் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற இந்த புத்தகம் ஒரு முக்கிய பதிவாகவும் முத்திரைப் பதிவாகவும் திகழ்கின்றது என்று மக்களை சொல்லவைக்கும்.

இது ஓர் இமைகள் ஸ்கேனிங் பார்வையின் விமர்சனப் பகுதி