> >

Friday, December 17, 2010

இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறதா?

இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறதா?
குற்றச்சாட்டுக்களும் பதில்களும் பாகம் 1
எழுதியவர். பி. ஜெய்னுல் ஆபிதீன்
நபீலா பதிப்பகம் விலை 26.00ரூபாய்

ஸ்கேனிங் பார்வை (புத்தக விமர்சனம்)

உலகம் முழுதும் ஒரு குற்றச்சாட்டு இஸ்லாத்தின் மீது இருந்தாலும் அதில் ஒரு சிலர் இஸ்லாமிய வரைவிலக்கணம் சரி தான் ஆனால் அதில் உள்ளக் கொள்கைரீதியில் முரண்பாடுகள் இருக்கின்றது அதில் ஒன்றுதான் இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கின்றது என்றும் அவர்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர் அவர்கள் சுதந்திரமாக இருக்கவில்லை என்ற வாதம். இது சரியானது தானா என்று அறியும் முன்னர் மற்றவேதங்களோ இல்லை என்றால் இன்று ஆணும் பெண்ணும் சம்மானவர்கள் என்றுச் சொல்லக்கூடிய நாடுகளோ அல்லது இதற்காக உரிமைக்குரல் எழுப்புகின்றவர் களோ என்ன செய்திருக்கிறார்கள் என்பதையும் அலச வேண்டி யிருகின்றது

இஸ்லாம் பெண்களை கண்ணியப் படுத்துகின்றது என்பதற்கு பெண்கள் (அந்நிஷா) என்ற தலைப்பில் ஒரு அத்தியாயம் திருக்குர்ஆனில் இடம் பெற்று இருக்கின்றது, ஆண்கள் என்ற தலைப்பில் ஓர் அத்தியாயமும் இடம் பெறவில்லை. இதைப் போன்று வேறு எந்த மத வேதங்களிலும் இருக்கின்றதா என்ற கேள்வி முதலில் எழுகின்றது. மேற்குலகின் அறிஞர் பெர்னாட்ஷா ஐ லைக் இஸ்லாம் பட் ஐஹேட் முஸ்லிம் என்றான் சிலர் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் பார்க்காமல் முஸ்லிம்களை மாத்திரம் பார்த்து எடைப் போடுகின்றனர் இதன் காரணமாகத்தான் இப்படி பட்ட கேள்விகள்


இன்று ஆண்களைக் காட்டிலும் பெண்களே இஸ்லாத்தை உலக அளவில் அதிகம் அதிகமாய் தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்று வருவதைப் பார்க்கின்றோம். அவரகளை அது துன்புறுத்து கின்றது என்றால் அடிமைப் படுத்துகிறது என்றால் இஸ்லாத்தை எப்படி ஏற்க முன்வருகின்றார்கள். என்று சிந்திக்க வேண்டும்.

உலகில் நடந்துவரும் இந்தக் தவறான கருத்தாக்கத்தை கலையும் முகமாக இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கின்றதா என்ற புத்தகத்தை பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் எழுதி இருக்கின்றார் அவரின் கருத்துக்கள் எப்படி இருக்கின்றது என்பதை விளக்குவதே இந்த ஸ்கேனிங் பார்வையின் நோக்கம்

இந்த புத்தகம் பதிமூன்று தலைப்புகளில் எழுதப் பட்டிருக்கின்றது, இதில் இஸ்லாம் பெண்ணின் உரிமையைப் பறிக்கிறதா? ஜீவனாம்சம், பலதாரமணம், ஹிஜாப், ஆட்சித் தலைமை, பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா? போன்ற தலைப்புக்களில் அவர் தந்திருக்கின்ற விளக்கங்கள் திருமறையிலிருந்தும் நபி மொழிகளிலிருந்தும் அடுகடுக்காண சான்றுகளை காண்கிறோம்.
பலதார மணம் பற்றிய கேள்விக்கு முதல் உலக யுத்தம் இரண்டாம் உலகயுத்தம் காரணமாக எத்தனை லட்சம் ஆண்கள் உயிரிழந்துள்ளார்கள் என்ற புள்ளிவிவரங்களும் அவர்களின் மனைவியர் விதவைகளாகிய பின்னர் அவர்களுக்கு மறுமணம் அவசியம் என்பதையும் உலக கண்ணோட்டத்தோடு அலசி இருப்பது இதுவரை யாரும் இந்த கோணத்தில் அலசாத ஒன்றாகும். இப்படி அறிவு ரீதியாகவும் ஆய்வு ரீதியாகவும் இந்த புத்தகம் பக்கத்திறகுப் பக்கம் மின்னுகிறது

இந்த புத்தகத்தைப் படித்தால் தர்க்க ரீதியாக கேள்விக்கணைத் தொடுப்பவர்களுக்கு நிச்சயமாக பதில் சொல்லமுடியும். என்பது மாத்திரமல்ல நாம் அறிந்திராத பல கேள்விக்களுக்கும் பதில் கிடைக்கின்றது என்பது உண்மை. மொத்தத்தில் இந்த புத்தகம் அறிவுக் களஞ்சியம்.

இது ஒர் இமைகள் ஸ்கேனிங் பார்வையின் விமர்சனப் பகுதி.