> >

Friday, December 10, 2010

சமர்ப்பனம்

அந்த இலக்கியவாதியின் வார்த்தை விளையாட்டை கேட்டு பலரும் ஆச்சரியத்தில் மெய் மறந்திருந்தார்கள் அரங்கம் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.. கைத்தட்டலால் அதிரவும் செய்தது.

வாசலில் கேட்டுக் கொண்டிருந்தார்கள் இம்ரானும் அவனின் ரும் மேட் நிக்ஸனும்.

-இன்னிக்கு தமிழ்நாட்டுல பேசப்படுகின்ற ஓரே கவிஞர் இவர்தான் என்ன தத்ரூபமான கவிதைகள் அவரோட வாரத்தையை பார்த்தியா நினைச்சே பார்க்க முடியாத சிந்தனையா இருக்கு என்றான் நிக்ஸன்.
-கவிதை என்றாலே அது பொய். கவிஞன் என்றால் அவன் பொய்யன் என்றான் இம்ரான்
-என்னடா சொல்றே
-இவர்களின் கவிதைகள் எதாவது ஒன்றில் சமூக அவலத்தை சுட்டிக்காட்டுற சிந்தனை வரிகள் எதாவது இருக்கின்றது என்று சொல்ல முடியுமா உன்னால
ஏன் இல்லை நீ பாக்கல படிக்கல என்றால் அவரின் வாரத்தைகள்ள உண்மையில்லைன்னு ஆயிடுமா என்றான் நிக்ஸன்
-ஆயிரம் சிருங்கார கவிதைகளை புனைந்துவிட்டு நடுவுல ஒரே ஒரு அர்த்தமுள்ள கவிதைகளை எழுதினா அதுக்கு என்ன அரத்தம் என்றான் இம்ரான்
-அவர குறைசொல்ற தகுதி உனக்கு இருக்குன்னு நீ நினைக்கிறியா என்றான் நிக்ஸன்
-விமர்ச்சிக்கிறதுக்கு என்ன தகுதி வேண்டும் என்று நீ எதிர் பார்க்குறே என்றான் இம்ரான்
-அதோ பார் ஒரு இளம் பெண் நமக்குப் பக்கத்துல நிக்கிறா அவளை வர்ணித்து ஒரே ஒரு கவிதையை என்கிட்டே நீ சொன்னா உனக்கு தகுதி இருக்குன்னு நான் ஒத்துக்கிறேன் என்றான் நிக்ஸன்
-எனக்கு அது எல்லாம் தெரியாது என்றான் இம்ரான்
-அப்ப எதுக்கு வீண் ஜம்பம் . விமர்சிக்கிறது ரொம்ப ரொம்ப சுலபம் நீ செய்யின்னு சொன்னா உடனே யூ டர்ன் அடிச்சு சுலபமா தப்பிச்சுக்கிறது இது நல்லவா இருக்கு என்றான் நிக்ஸன்
-அதுக்காக அவர் எழுதினது எல்லாமே உலகம் போற்றுகிற கவிதைன்னு சொல்லவரியா என்றான் இம்ரான்
-தகுதி இல்லாதவன் விமர்ச்சிக்க கூடாது என்கிறது தான் என்னோட கருத்து என்றான் நிக்ஸன்
-அப்போ ரசிக்கிறதுக்கும் கைதட்டுறதுக்கும் என்ன தகுதி வேணும் என்றான் இம்ரான்.
-கேட்கிறதும் புரிஞ்சிக்கிறதும் தான் தகுதி என்றான் நிக்ஸன்
-அப்போ புரியாதவன் என்னான்னு கேட்கவேக் கூடாதா பாமரன் புரிஞ்சுக்கிற மாதிரி கவிதை எழுதமாட்டீங்களா இல்லை எழுதறது இழுக்குன்னு நினைக்கிறீங்களா என்றான் இம்ரான்
-சரி அப்போ நீ தான் யதார்த்தமான ஒரு கவிதையை அந்த பெண்ணை பார்த்து வர்ணித்து சொல்லேன் என்றான் நிக்ஸன்
-என் மனசுல எழுறத சொல்றேன் அது கவிதையா இல்லையான்னு நீ தான் சொல்லனும் என்றான் இம்ரான்
-பார்ரா நீ கூட கவிதை சொல்லப்போறியா என சிரித்தான் நிக்ஸன்
-பாத்தியா இதுகூட ஒரு விமர்சனம்ங்கிறத நீ புரிஞ்சுக்கல அதனால தான் நான் சொல்றதுக்கு முன்பே விமர்ச்சிக்க ஆரம்பிசுட்டே என்றான் இம்ரான்
-சரிப்பா உன் கவிதை வரிகளை கேட்க நான் தயாராகிவிட்டேன் என்றான் நிக்ஸன்

”புன்னகைகள் இருப்பதினால்
பொன்நகைகளில் விருப்பமில்லையோ பெண்ணே
உன் போன்றே பெண்மணிகள் நினைத்துவிட்டால்
ஆண்களுக்கு கவலை நோய் ஏது?
தொல்லைகள் ஒரு கோடி வந்தாலும்
உன் முகம் கண்டு விலகாதோ
பெண்ணே நீ கற்ற
இரகசியத்தை உன் இனத்திற்கும் உரைப்பாயா?”

-இது தான் அந்த பெண்ணைப் பார்த்ததும் என் மனதில் உதித்த வரிகள் என்றான் இம்ரான்
பின்னால் நின்றிருந்த அந்த பெண்ணின் முகத்தில் ஒரு புன்சிறிப்பு அரும்பியதை கண்டான் நிக்ஸன்
-சாரிடா இம்ரான் உனக்குள்ள ஒரு கவிஞன் இருக்கறதை நான் நினைச்சேப் பார்க்கல என்றான் நிக்ஸன்
-அந்தப் பெண் புன்னகைச் செய்ததை நாம இரண்டுப் பேருமே பார்த்தோமே அது தான் நான் சொன்ன கவிதைக்கு கிடைச்சப் பரிசுன்னு நினைக்கிறேன் என்றான் இம்ரான்
-நிச்சயமா நான் சொல்றேன்டா உனது கவிதை யதார்த்தமா இருந்துச்சு நீ இனிமேலும் கவிதை எழுதனும் என்றான் நிக்ஸன்
-வேண்டாம்ப்பா கவிதை எழுத ஆரம்பிச்சப் பின்னாடி நானும் செருக்கோடு எழுதமாட்டேனு என்ன நிச்சயம் என்றான் இம்ரான்
-கவிஞன் கிட்ட இருக்கின்ற பண்புகள்ல இதுவும் ஒன்னு இல்லையா
-அதனால
-அது தப்பே இல்ல என்றான் நிக்ஸன்
-இதுல இருந்து தான் நான் வேறுபடுறேன் என்றான் இம்ரான்
-எப்படி?
-நான் ஒரு முஸ்லிம் என்கிறத நம்புறவன் அதனால என்னால எல்லோரையும் போல எழுதிடவும் முடியாது முரண்படவும் முடியாது
-மத்தவங்க எப்படி கவிதையில முரண்படுறாங்கன்னு சொல்றே?
-ஒரு தமிழ்பட பாடல் வரியில வருது ”கடவுள் வந்து கேட்டால் கூட காணிக்கை தரமாட்டேன்” என்கிற வரி இதுக்கு என்ன அர்த்தம் கடவுள் தேவை உள்ளவன் அவனே வந்து கேட்டாலும் நான் தரமாட்டேன் என்கிறது கடவுளின் பவரை குறைக்கிறது போல தெரியலையா
இது மாத்திரமில்ல ஒரே கவிஞரே அடுத்தடுத்தப் பாடல்ல முரண்படுறதைப் பாடல்களா கேட்டதில்லையா
-அப்படி பட்ட பாடல் வரிகள் கூட இருக்கா என்ன
”மனிதன் என்பவன் தெய்வமாகலாம்ங்கிறாங்க”
அதுக்கு அடுத்தப் பாடல்ல ”கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும்” என்று எழுதுறாங்க இந்த வரிகள் கடவுள் தன்மைக்கு எதிரானது என்கிறது தெரியலையா என்றான் இம்ரான்
-அப்போ உங்க மதத்துலேயும் தான் இப்படிபட்ட பாடலையும் பாடி இருக்காங்க என்கிறது தெரியுமா உனக்கு என்றான் நிக்ஸன்
நல்லாத் தெரியும் ”இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொலவதில்லை” என்று பாடிவிட்டு அதுக்கு அடுத்த பாடல் ”நமனை விரட்ட மருந்தொன்று விக்கிது நாகூர் தர்ஹாவிலேன்னு” பாடுறது தப்பு இது ஓர் இறை கொள்கைக்கு முரண்பாடானது என்று விமர்ச்சித்து இருக்கின்றோம் இது போல யாராவது விமர்சித்து இருக்கங்களா என்றான் இம்ரான்
-அது உண்மை தான்,யாரும் அப்படி விமர்சிக்கல தான் என்றான் நிக்ஸன்
...இரண்டு வாரம் சென்றிருக்கும் நிக்ஸன் இம்ரானுக்கு தன் செல்போனின் பேசினான்
இம்ரான் எங்கேடா இருக்கே
இது லஞ்ச் டைம்னு உனக்குத் தெரியாதா கேண்டீன்ல தான் இருக்கேன் என்னடா என்ன விசயம்
முதல்ல போயி ரேகான்னு ஒரு வார இதழ் விக்கும் அத வாங்கிப் பாரு என்றான் நிக்ஸன்
அதுல என்ன இருக்கு என்றான் இம்ரான்
வாங்கிப்பாரு தெரியும் என்று சொல்லிவிட்டு போனை கட் செய்து விட்டான்
அவசரம் அவசரமாக ஆபீஸிலிருந்து வெளியே வந்து அருகில் இருந்த கடையில் தொங்கிக் கொண்டிருந்த ரேகா என்ற வார இதழை வாங்கிப் புரட்டி பார்த்தான் இம்ரான் அதில் முதல் பரிசுப் பெற்ற கவிதையாக அன்று அந்தப் பெண்ணை வர்ணித்து சொல்லி இருந்தான் அல்லவா அந்த கவிதை தான் பிரசுரிக்கப் பட்டிருந்தது மட்டுமல்ல என்னை வர்ணித்து பாடிய அந்த முகம் தெரியாத அந்த கவிஞனுக்கு சமர்ப்பிக்கன்றேன் என்று அடிகோடிடப்பட்டிருந்து.

2 comments:

Anonymous said...

தங்களுடை படைப்பு பாரட்டக்குறியது....

Anonymous said...

இலக்கியம் என்பது சமகாலத்தின் பதிவுகளாவே கவனிக்கப்படுகின்றது, தெளிவாகவும் நடுநிலையோடும் எழுத்துப் பிரயோகம் செய்திருப்பது எழுத்தாளரின் எழுத்திற்கு கிடைத்த வெற்றி.

Regards,
Mohamed kasali, Pattukkottai..