> >
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, December 4, 2010

சூனியமல்ல......... மதிப்பு

வாழ்க்கை என்பதோ உலகம்
உலகமோ ஒர் உருண்டை
உருண்டை என்பது சூனியம்
சூனியமா வாழ்க்கை ?

இமைகளை திறந்தவனுக்கு
காட்சிகளே சாட்சிகள்
இருளில் நுழைந்தவனுக்கு
சாட்சிகளே காட்சிகள்

ஓன்றுமில்லை என்பதல்ல
சூனியம்
ஞானமறியாதவனே சூனியம்
சுற்றுபவன் சுமையானவன்
சுமப்பவனே சுகமானவன்

மோகம் என்பது விடிவல்ல
மீளல் என்பதே விடிவு
விடிவெள்ளியின் அவதாரம்
அதன் பின்னல்லவா
விடியலுக்கு பிரகாசம்

வாழ்க்கை என்பது ஓர் உலகம்
உலகம் என்பது உருண்டை
உருண்டை எனபது மதிப்பு
மதிப்பல்லவா வாழ்க்கை.

Tuesday, January 22, 2008

பிச்சை

ஓ வானமே
உன் நீலநிற
புடவையின்
ஓரத்தை கிழித்துத்தா.
இங்கே
பூமியில்
ஜனநாயகத்தாய்
நிர்வாணமாகக் கிடக்கிறாள்.

Tuesday, November 20, 2007

சமாதானம்

வியட்நாம் அலைவரிசையில்
நீங்கள் கேட்டுவந்த
வேதனைப் பாடல்களின்
ஒலிபரப்பு
இத்துடன் முடிகிறது.
மீண்டும்
வேறு அலைவரிசையில்
இதேப் பாடல்கள்
தொடரும் வரை -
நேயர்களுக்கு நன்றி
கூறி விடைபெறுவது...

காவல்

விழிகள்
நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்கள் என்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான்

Tuesday, November 6, 2007

யார் குற்றம்?

பிருந்தாவனத்தை
சஹாராவாக்கியது
யார் குற்றம்?
வாழ்க்கை நாணயம்
இரு
பக்கங்களிலானது
என்று
புரிந்த பின்னும்.

மொழி

காற்றின் மொழிகேட்டேன்
குளிர் என்றது;
அலையின் மொழிகேட்டேன்
நடனம் என்றது;
மரத்தின் மொழிகேட்டேன்
திமிர் என்றது;
அன்பே உன் விழி பேசும் மொழி
கேட்டேன்
மௌனமானாயே...

மறுபக்கம்

காதலுக்கு
பச்சைக் கொடி
காட்டும் கதாநாயகன்
தன் இல்லத்தில்
அரிதாரம் கலைகின்றான்
வில்லனாய்...

வாழ்க்கை

வாழ்க்கை என்பது
ஒற்றை நாணயம்
தோல்வியும்,வெற்றியும்-அதன்
இரண்டு பக்கங்கள்.

வெற்றியில்
உழழ்வதும்
தோல்வியில்
துவழ்வதும்
மானுட இயல்பு.

லட்சியத்தால்
மனதிற்குள்
கோடுபோடு
முயற்சியால்
அதற்கு ரோடுபோடு.

பயம்தான்
முயற்சியின்
முன்விரோதி
பயத்திற்கு பயம்காட்டு.

தடைக்கற்களில்
தவமிரு
தட்சணைகள்
தானாய் வரும்.

வெண்ணிலவிற்கு
ஆசை வேண்டாம்
கை
மண்ணளவிற்கு
முயற்சி செய்.

அகந்தையை
அகற்று
அன்பு
அரவணைக்கும்.

தூற்றலை
துரத்து
ஆற்றல்
ஆராதிக்கும்.

இழப்பை
மதிப்பிடு
அது அனுபவமாகும்
இருப்பதில்
செயல்படு
அது ஆரோக்கியமாகும்.

நம்
செயல்களல்லவா
நாளை நம்மைப்
பின் தொடரும்.