ஓ வானமே
உன் நீலநிற
புடவையின்
ஓரத்தை கிழித்துத்தா.
இங்கே
பூமியில்
ஜனநாயகத்தாய்
நிர்வாணமாகக் கிடக்கிறாள்.
Tuesday, January 22, 2008
Tuesday, January 15, 2008
வாழ்கிறதா? காதல்
மயிழிறகின்
வருடலாய்
என் மனதில் பூக்கும்
உன் வருகையால்
மகிழ்ச்சி.
ஆயிரம்
வார்த்தைகளுக்கு சமம்
என் மௌனம்
கலைத்த
உன்
ஒரு புன்னகை.
என்
கரம் பற்றி நடந்த
வேளைகளில்
தேவலோகம்
உன் கண்களில்.
ஏமாந்த நிமிடங்கள்
எத்தனை தெரியுமா?
உன் குரலொழிக்கும்
சலங்கை ஒலிக்கும்
வித்தியாசம் தெரியாமல்.
முட்பாதையில்
பயணம்
முடிவில்
முல்லை ரதம் என்றாய்.
காத்திருந்து காத்திருந்து
கரைந்து போனது
காலம்
கண்விழித்து கண் விழித்து
கவலை நோயானது
வாழ்வு.
வார்த்தைக்கு
வேண்டும் சத்தியம்
உன்னிடம் எதிர்பார்த்தவன்
பைத்தியம்
உன் வாழ்விற்கு
இதுவா முக்கியம்.
காதல்
சொல்லரங்கில்
உன் செவிகளில் உணவு
என் மனதினில்பசி
நீ
முல்லைரதம் ஏறி
எனக்கு
முட்களை பரிசளித்தாய்
பாழும் மனதில்
ஆசிட் தெளித்த
பின்பும்
வளர்கிறதே
நெருஞ்சி முள்.
சுவாசிக்க நினைத்தது
என் தவறோ
நீரின் உள்ளே.
நீந்த நினைத்தது
என் தவறோ
நெருப்பின் உள்ளே.
அழகை ஆராதித்ததும்
என் தவறோ
ஆபத்தின் உள்ளே.
காதல்தான்
வாழ்கிறது
காதலர்கள்.........?
வருடலாய்
என் மனதில் பூக்கும்
உன் வருகையால்
மகிழ்ச்சி.
ஆயிரம்
வார்த்தைகளுக்கு சமம்
என் மௌனம்
கலைத்த
உன்
ஒரு புன்னகை.
என்
கரம் பற்றி நடந்த
வேளைகளில்
தேவலோகம்
உன் கண்களில்.
ஏமாந்த நிமிடங்கள்
எத்தனை தெரியுமா?
உன் குரலொழிக்கும்
சலங்கை ஒலிக்கும்
வித்தியாசம் தெரியாமல்.
முட்பாதையில்
பயணம்
முடிவில்
முல்லை ரதம் என்றாய்.
காத்திருந்து காத்திருந்து
கரைந்து போனது
காலம்
கண்விழித்து கண் விழித்து
கவலை நோயானது
வாழ்வு.
வார்த்தைக்கு
வேண்டும் சத்தியம்
உன்னிடம் எதிர்பார்த்தவன்
பைத்தியம்
உன் வாழ்விற்கு
இதுவா முக்கியம்.
காதல்
சொல்லரங்கில்
உன் செவிகளில் உணவு
என் மனதினில்பசி
நீ
முல்லைரதம் ஏறி
எனக்கு
முட்களை பரிசளித்தாய்
பாழும் மனதில்
ஆசிட் தெளித்த
பின்பும்
வளர்கிறதே
நெருஞ்சி முள்.
சுவாசிக்க நினைத்தது
என் தவறோ
நீரின் உள்ளே.
நீந்த நினைத்தது
என் தவறோ
நெருப்பின் உள்ளே.
அழகை ஆராதித்ததும்
என் தவறோ
ஆபத்தின் உள்ளே.
காதல்தான்
வாழ்கிறது
காதலர்கள்.........?
Saturday, January 12, 2008
பொங்கல்
வைகறை வெயில்
பூமி வெடிப்பு
வயல்
வளர்த்த நாற்றில்.
மஞ்சள் செடிகள்
பூத்த வரப்பில்
நெருஞ்சி முட்கள்.
ஆடி ஓடிய
ஆற்றுப் படுகையில்
மணலைக் காணோம்.
ஒருமுறை
பெய்த மழையில்
கரையைக் காணோம்.
வாய்க்கால் நீரில்
உருகி நிற்கும்
ஒற்றைக் கால்
கொக்கைக் காணோம்.
மார்கழி மாசக்
கடைசிக் குளிரும்
சூடாய் தெரியும்
மனது
கண்ணீர் துளிர்க்க
வானம் பார்க்கும் விவசாயி
வாசலைத் தட்டுமே
வட்டிப் பிசாசு பெரிசாகி.
தை
பொங்க வருகிறது
குமறி.
பூமி வெடிப்பு
வயல்
வளர்த்த நாற்றில்.
மஞ்சள் செடிகள்
பூத்த வரப்பில்
நெருஞ்சி முட்கள்.
ஆடி ஓடிய
ஆற்றுப் படுகையில்
மணலைக் காணோம்.
ஒருமுறை
பெய்த மழையில்
கரையைக் காணோம்.
வாய்க்கால் நீரில்
உருகி நிற்கும்
ஒற்றைக் கால்
கொக்கைக் காணோம்.
மார்கழி மாசக்
கடைசிக் குளிரும்
சூடாய் தெரியும்
மனது
கண்ணீர் துளிர்க்க
வானம் பார்க்கும் விவசாயி
வாசலைத் தட்டுமே
வட்டிப் பிசாசு பெரிசாகி.
தை
பொங்க வருகிறது
குமறி.
Saturday, November 24, 2007
குரல் கொடு தமிழா
தமிழ் தாய்
மண்
அடகு போகின்றது.
மீட்டெடுக்க
கவியரசர்களைக்
காணோம்
தன்னலப் பேரரசகள்
முளைக்கிறார்கள்.
சிருங்காரத்தை
சிற்பமாக்கி
சித்து விளையாடும்
சினிமா.
வக்கிர சிந்தனையின்
ஊற்றுக் கண்.
பண்பாட்டின் மீது
படையெடுப்பாய்...
திரைத் தொடர்கள்.
மண்ணின் மாண்புகளை
புதைத்திடும்
புதைகுழி.
ஆன்மாவைக்
குறிவைத்து
அதிரடித்தாக்குதல்.
ஜாதியில்
எரிகிறது மானுடம்
சா ''தீ'' என
சொல்வாரில்லை
அமைதி பூங்காவில்
குருதிப் பூக்கள்.
சாவுமணி
அடிக்கிறது
சர்வதேசம்.
தாங்குமோ
நம்
தமிழ்தேகம்.
களைகளின் கையில்
களைக் கொத்தி
உளிப் பிடித்தவன் எல்லாம்
சிற்பி.
அனாச்சார சுனாமி
கலாச்சாரத்திற்கு
காவலா?
விரிசலின் பிடியில்
பெற்றோர்
தன் மனப்
பரிசலின் மடியில்
மக்கள்.
ஒட்டி வாழ்ந்த
காலமெல்லாம்
குறைவில்லையே.
உறவை
வெட்டி வாழும்
காலமெல்லாம்
நிறைவில்லையே.
உலகப் பற்றாளர்களே
கொஞ்சம்
தமிழ் மண் மீதும்
பற்று வையுங்கள்.
தமிழ்த்தாய்
கண்களில்
கண்ணீர்.
மீட்டெடுக்க
கைகள் வேண்டாம்
ஒரு முறையேனும்
குரல் கொடுங்கள்.
மண்
அடகு போகின்றது.
மீட்டெடுக்க
கவியரசர்களைக்
காணோம்
தன்னலப் பேரரசகள்
முளைக்கிறார்கள்.
சிருங்காரத்தை
சிற்பமாக்கி
சித்து விளையாடும்
சினிமா.
வக்கிர சிந்தனையின்
ஊற்றுக் கண்.
பண்பாட்டின் மீது
படையெடுப்பாய்...
திரைத் தொடர்கள்.
மண்ணின் மாண்புகளை
புதைத்திடும்
புதைகுழி.
ஆன்மாவைக்
குறிவைத்து
அதிரடித்தாக்குதல்.
ஜாதியில்
எரிகிறது மானுடம்
சா ''தீ'' என
சொல்வாரில்லை
அமைதி பூங்காவில்
குருதிப் பூக்கள்.
சாவுமணி
அடிக்கிறது
சர்வதேசம்.
தாங்குமோ
நம்
தமிழ்தேகம்.
களைகளின் கையில்
களைக் கொத்தி
உளிப் பிடித்தவன் எல்லாம்
சிற்பி.
அனாச்சார சுனாமி
கலாச்சாரத்திற்கு
காவலா?
விரிசலின் பிடியில்
பெற்றோர்
தன் மனப்
பரிசலின் மடியில்
மக்கள்.
ஒட்டி வாழ்ந்த
காலமெல்லாம்
குறைவில்லையே.
உறவை
வெட்டி வாழும்
காலமெல்லாம்
நிறைவில்லையே.
உலகப் பற்றாளர்களே
கொஞ்சம்
தமிழ் மண் மீதும்
பற்று வையுங்கள்.
தமிழ்த்தாய்
கண்களில்
கண்ணீர்.
மீட்டெடுக்க
கைகள் வேண்டாம்
ஒரு முறையேனும்
குரல் கொடுங்கள்.
Tuesday, November 20, 2007
சமாதானம்
வியட்நாம் அலைவரிசையில்
நீங்கள் கேட்டுவந்த
வேதனைப் பாடல்களின்
ஒலிபரப்பு
இத்துடன் முடிகிறது.
மீண்டும்
வேறு அலைவரிசையில்
இதேப் பாடல்கள்
தொடரும் வரை -
நேயர்களுக்கு நன்றி
கூறி விடைபெறுவது...
நீங்கள் கேட்டுவந்த
வேதனைப் பாடல்களின்
ஒலிபரப்பு
இத்துடன் முடிகிறது.
மீண்டும்
வேறு அலைவரிசையில்
இதேப் பாடல்கள்
தொடரும் வரை -
நேயர்களுக்கு நன்றி
கூறி விடைபெறுவது...
Tuesday, November 6, 2007
யார் குற்றம்?
பிருந்தாவனத்தை
சஹாராவாக்கியது
யார் குற்றம்?
வாழ்க்கை நாணயம்
இரு
பக்கங்களிலானது
என்று
புரிந்த பின்னும்.
சஹாராவாக்கியது
யார் குற்றம்?
வாழ்க்கை நாணயம்
இரு
பக்கங்களிலானது
என்று
புரிந்த பின்னும்.
Subscribe to:
Posts (Atom)
