> >

Tuesday, January 15, 2008

வாழ்கிறதா? காதல்

மயிழிறகின்
வருடலாய்
என் மனதில் பூக்கும்
உன் வருகையால்
மகிழ்ச்சி.

ஆயிரம்
வார்த்தைகளுக்கு சமம்
என் மௌனம்
கலைத்த
உன்
ஒரு புன்னகை.

என்
கரம் பற்றி நடந்த
வேளைகளில்
தேவலோகம்
உன் கண்களில்.

ஏமாந்த நிமிடங்கள்
எத்தனை தெரியுமா?
உன் குரலொழிக்கும்
சலங்கை ஒலிக்கும்
வித்தியாசம் தெரியாமல்.

முட்பாதையில்
பயணம்
முடிவில்
முல்லை ரதம் என்றாய்.

காத்திருந்து காத்திருந்து
கரைந்து போனது
காலம்
கண்விழித்து கண் விழித்து
கவலை நோயானது
வாழ்வு.

வார்த்தைக்கு
வேண்டும் சத்தியம்
உன்னிடம் எதிர்பார்த்தவன்
பைத்தியம்
உன் வாழ்விற்கு
இதுவா முக்கியம்.

காதல்
சொல்லரங்கில்
உன் செவிகளில் உணவு
என் மனதினில்பசி
நீ
முல்லைரதம் ஏறி
எனக்கு
முட்களை பரிசளித்தாய்

பாழும் மனதில்
ஆசிட் தெளித்த
பின்பும்
வளர்கிறதே
நெருஞ்சி முள்.

சுவாசிக்க நினைத்தது
என் தவறோ
நீரின் உள்ளே.

நீந்த நினைத்தது
என் தவறோ
நெருப்பின் உள்ளே.

அழகை ஆராதித்ததும்
என் தவறோ
ஆபத்தின் உள்ளே.

காதல்தான்
வாழ்கிறது
காதலர்கள்.........?

0 comments: