> >

Monday, August 18, 2008

சுமைதாங்கியின் வலி (தொடர்ச்சி)

- இப்போ இந்த இராத்திரி நேரத்தில் எங்கேன்னா போறேள் என அவரின் மனைவி
கேட்டாள்.
- தூக்கம் வரலடி. வெளியே ஒலிபெருக்கியில் ஏதோ பேசின்டு இருக்காள். அதைக் கொஞ்சம்
கேட்டுண்டு வந்தா மனசு பாரம் குறையும்.

- சித்த இருங்கோ நானும் வர்ரேன்.

இருவரும் மாடி ஏறினார்கள். ஒலிபெருக்கியின் சப்தம் இப்பொழுது துல்லியமாக காதில் விழுந்தது.

அது இஸ்லாமியர்களின் தெருமுனைப் பிரச்சாரம். அதன் சாரம்சமானது

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், உங்களின் வயதான தாய்,தந்தையரை மரியாதைக் குறைவாக நடத்தாதீர்கள். உங்களின் தாயின் காலடியில் சொர்க்கம் இருப்பதை மறந்து விடாதீர்கள். இப்படி கூறிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தன் தந்தையை பார்த்ததில்லை. பிறந்த சில வருடங்களிலேயே தாயையும் இழந்து அனாதையாக இருந்தவர்கள் என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள்.

பெற்றோர்களைப் பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான், மனிதனுக்கு அவர்களின் பெற்றோர் குறித்து விவரித்துள்ளோம். அவனை அவன் தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாக சுமந்தாள். அவனுக்கு இரண்டு வருடம் பால் புகட்டனாள், எனக்கும் உனது பெற்றோருக்கும் நன்றி செழுத்துவாயாக என்னிடமே உங்களின் திரும்புதல் உண்டு.

இதுமட்டுமல்ல அன்புக்குரியவர்களே! மேலும் கூறுவதைக் கேளுங்கள். அன்பு, பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக. சிறுவனாக இருக்கும் பொழுது என்னை இருவரும் பராமரித்தது போல இறைவா அவ்விருவருக்கும் அருள்புரிவாயாக என்று பிரார்த்தனைச் செய்யச் சொல்கின்றான்.

மேலும் கூறுவதைக் கேளுங்கள்.

அல்லாஹ்வை வணங்குங்கள், அவனுக்கு எதையும் இணையாக கருதாதீர்கள். பெற்றோர்க்கும், உறவினர்க்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத்தோழருக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள். பெருமையடித்து கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த இருவருக்கும் ஒருவித சிலிர்ப்பு ஏற்பட்டது. அதன் விளைவாக அவரின் மனைவி தன் கணவரிடம்

- என்னன்னா நம்ப பிரச்சினையைப் பற்றி பேசிண்டு இருக்கா?

- ஏதோ முஸ்லிம்களின் பிரச்சாரம் போல இருக்குடி. உன் புள்ளை மேடையில் பேசினானே
கேட்டியோ? முஸ்லிம்கள் இந்த முதியோர்கள் இல்லத்தில் இல்லாததை கண்டு
வருத்தப்பட்டான் இல்லையோ? அதற்காண காரணம் எனக்கு இப்பத்தான்டி விளங்குது.

- என்னத்த புரிஞ்சுண்டேள்.

- ஒருத்தரோட வாக்கும், அவர் சொன்ன வேதமும் இத்தனை வருசமா
கடைபுடிக்கிறாங்கன்னா? அதில் உயிரோட்டமும், சத்தியமும் இருக்குன்னுதானடி அர்த்தம்?
இதெல்லாம் நமக்கு புரியாம போச்சே? எல்லாம் சரியா புரிந்திருந்தா இப்படியொரு நிலை
நமக்கு ஏற்படாமலே இருந்திருக்கும் இல்லையா?

- ஏதேதோ பேசரேள். வேதங்கள் எல்லாம் நல்லது தான் சொல்லது அதன்படி
நடக்குனுமோன்னா.

முற்றும்.

2 comments:

Anonymous said...

salaam

Anonymous said...

Salaam